News April 15, 2024

கடலூர் அருகே சோகம்

image

சிதம்பரம் அருகே உள்ள கண்ணங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அரங்கநாதன். லாரி ஓட்டுநரான இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் அருகில் உள்ள பாசிமுத்தன் உடையில் மீன் பிடிக்க சென்றார். எதிர்பாரத விதமாக நீரில் மூழ்கினார். அவரை மீட்ட மக்கள் மருத்துவமனையில்  சேர்த்தனர் அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Similar News

News November 13, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (நவ.12) இரவு 10 மணி முதல் இன்று (நவ.13) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 12, 2025

கடலூர்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் மாதம்தோறும் நான்கு புதன் கிழமைகளில் நடைபெற்று வந்த மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (Unique Disabiliy Identity Card) வழங்கும் முகாம்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மாதத்தின் முதல் வார புதன் மற்றும் அனைத்து வெள்ளிகிழமைளில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News November 12, 2025

கடலூர்: டிராக்டர் சக்கரம் ஏறி பரிதாப பலி

image

கடலூர் கம்மியம்பேட்டை பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (56). இவர் குடிநீர் எடுத்து செல்லும் டிராக்டர் வண்டியின் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல குடிநீர் வண்டியில் கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது, வேல்முருகன் வண்டியில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில் வண்டியின் பின் சக்கரம் லோகநாதன் மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!