News March 27, 2024

கடலூர் அருகே கணவர் தூக்கிட்டு தற்கொலை

image

பண்ருட்டி அருகே உள்ள புலவன்குப்பம் ராஜாபாளையம் மெயின் ரோட்டில் வசித்து வந்த வேலு மனைவி சுகுணா தம்பதியினர் ஆவர்.  இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த வேலு தனக்கு சொந்தமான வயலில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 16, 2025

கடலூர்: நாய் கடித்ததால் மாணவி தற்கொலை

image

ம.புடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீமான் மகள் பிருந்தா (19). தனியார் கல்லூரியில் படித்து வரும் இவர் தனது வீட்டிற்கு முன் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது தெரு நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று வீட்டில் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 16, 2025

கடலூர் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் விடுடுத்திருக்கும் நிலையில், கடலூர் மாவட்டத்தில் பருவ மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக, கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் ஏதேனும் அவசரம் என்றால் மாவட்ட நிர்வாகத்திற்கு 04142220700 / 1077 என்ற இலவசம் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

News November 16, 2025

கடலூர்: ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

image

சிறுதொண்டமாதேவி முந்திரி தோப்பில் கள்ளச்சாராயம் காட்சியதாக காடாம்புலியூர் போலீசாரால் கைது செய்யப்பட்ட மேகநாதன் (37) என்பவர் மீது கொள்ளை, அடிதடி, சாராயம் காய்ச்சுதல் உள்ளிட்ட 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரின் தொடர் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் மேகநாதனை குண்டர் சட்டத்தில் அடைக்க நேற்று உத்தரவிட்டார்.

error: Content is protected !!