News August 10, 2024

கடலூர் அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனை

image

கடலூர் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாட்டின் 78ஆவது சுதந்திர தின விழா வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக கடலூர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் 25 ரூபாய்க்கு தேசிய கொடி விற்பனை செய்யப்படுகிறது. இதை https://www.cpostolics.gov.in இணையதளம் மூலமும், அருகில் உள்ள அஞ்சலகங்களில் நேரில் சென்றும் வாங்கலாம். ஷேர் செய்யவும்

Similar News

News November 27, 2025

கடலூரில் பயங்கரம்: வாலிபர் அடித்துக் கொலை

image

கடலூர் மஞ்சகுப்பம் லோகநாதன் நகர் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (37). இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று (நவ 27) அதிகாலை 3 மணி அளவில் அவரது வீட்டுக்குள் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பால்ராஜை உருட்டு கட்டையால் அடித்துக் கொலை செய்தனர். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார், பால்ராஜை கொலை செய்த நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

News November 27, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் வரும் நவ.28-ம் தேதி முதல் நவ.30-ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் நாளை (நவ.28) நடைபெற இருந்த விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம், ரத்து செய்யப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

News November 27, 2025

கடலூர்: ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் (26.11.2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில், ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!