News April 23, 2025

கடலூர் அங்கன்வாடி பணியாளராக கடைசி வாய்ப்பு

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள 222 அங்கன்வாடி பணியிடங்கள், 3 குறு அங்கன்வாடி பணியிடங்கள் மற்றும் 243 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை இங்கே <>க்ளிக் செய்து<<>> பதிவிறக்கம் செய்து, இன்று (ஏப்.23) மாலை 5 மணிக்குள் வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலத்தில் விண்ணப்பிக்கலாம். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்..

Similar News

News February 22, 2026

விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை; ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட விவசாயிகள் பிரதமரின் கவுரவ நிதி உதவி பெற விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள அட்டையினை வருகிற பிப்.26ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரையில் பெறாதவர்கள் அருகில் உள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

News February 22, 2026

கடலூர்: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

image

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது<> இ-பெட்டகம் என்ற<<>> செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News February 22, 2026

பண்ருட்டி: சிறுமியை கர்ப்பம் – இளைஞர் மீது போக்சோ வழக்கு

image

பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரும் அதே பகுதியை சேர்ந்த சிவாவும் (25) காதலித்து வந்தனர். மேலும் சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் அந்த சிறுமியுடன் சிறுமி தற்போது 6 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் நேற்று போக்சோ சட்டத்தில் சிவா மீது வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!