News August 17, 2024
கடலூரில் ரவுடியை வெட்டிய மர்ம நபர்கள்

கடலுாரில் ரவுடியை வெட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கம்மியம்பேட்டையைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் நேற்றிரவு (ஆக.16) 10:00 மணிக்கு கம்மியம்பேட்டை அய்யனார் கோவில் அருகில் நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத 2 பேர் திடீரென மூர்த்தியை சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 26, 2025
கடலூர்: ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (அக்டோபர் 25) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 25, 2025
கடலூர்: அருங்காட்சியகம் கட்டும் பணியை ஆட்சியர் ஆய்வு

நகராட்சி நிருவாகத்துறை இயக்குநர் மதுசூதன் ரெட்டி, கடலூர், மஞ்சக்குப்பம் சுப்பராயலு பூங்கா அருகே மீன் அருங்காட்சியகம் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை இன்று (25.10.2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாநகராட்சி ஆணையாளர் முஜிபூர் ரஹ்மான் உட்பட பலர் உள்ளனர்.
News October 25, 2025
கடலூர்: ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

கடலூர், 12 ஆம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு தேர்வு தேர்ச்சி தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் தலைமையாசிரியர்கள் மற்றும் துறை அலுவலர்களுடன் இன்று (25.10.2025) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.எல்லப்பன் உட்பட பள்ளிக் கல்வித் துறையை சேர்ந்த அதிகாரிகள் பலர் உள்ளனர்.


