News August 17, 2024
கடலூரில் ரவுடியை வெட்டிய மர்ம நபர்கள்

கடலுாரில் ரவுடியை வெட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கம்மியம்பேட்டையைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் நேற்றிரவு (ஆக.16) 10:00 மணிக்கு கம்மியம்பேட்டை அய்யனார் கோவில் அருகில் நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத 2 பேர் திடீரென மூர்த்தியை சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 19, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று(நவ.18) இரவு 10 மணி முதல் இன்று(நவ.19) காலை 6 மணி வரை கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாதோப்பு, ஆகிய உட்கோட்டங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மாவட்ட காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 18, 2025
புனித பயணம் மேற்கொண்டவர்களுக்கு மானியம்

ஜெருசேலம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்துவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 பேருக்கு நேரடியாக மானியம் வழங்குவதற்கு புர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 28.2.2025-க்குள் <
News November 18, 2025
கடலூர் மாவட்டத்தில் பதிவான மழை நிலவரம்!

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (நவ.18) காலை 8.30 மணி நிலவரப்படி அண்ணாமலை நகர் 60 மில்லி மீட்டர், சிதம்பரம் 47.8 மில்லி மீட்டர், பரங்கிப்பேட்டை 43.1 மில்லி மீட்டர், கடலூர் 36.9 மில்லி மீட்டர், காட்டுமன்னார்கோவில் 35 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 32.3 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 559 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.


