News January 22, 2025
கடலூரில் மின்தடை அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.23) மாதாந்தர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் கேப்பர்மலை, ஸ்ரீமுஷ்ணம், ஊமங்கலம், மேலப்பாளையூர், சிற்றரசூர், கீழ்கவரப்பட்டு, திருப்பாதிப்புலியூர், மேல்பட்டாம்பாக்கம், காவனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News January 11, 2026
கடலூர்: மின்சாரம் தாக்கி மாணவர் சாவு

ஆலடி அடுத்த இருளக்குறிச்சியை சேர்ந்தவர் முத்து மகன் மணிகண்டன் (17). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மணிகண்டன், அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மின்சாரம் இல்லாததால், அங்குள்ள மின்கம்பத்தில் ஏறி சரிசெய்ய முயன்றார். அப்போது அவர் மீது மின்கம்பி உரசியதில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மணிகண்டன் உயிரிழந்தார். இதுகுறித்து ஆலடி போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
News January 11, 2026
கடலூர்: லட்சக் கணக்கில் மோசடி செய்தவர் கைது!

சிதம்பரத்தில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் செல்வம். இவரிடம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எஸ். பெருமாள் (39) என்பவர் தனியார் ஆப் மூலமாக லோன் வாங்கி தருவதாக கூறி ரூ.7,61,050 பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து செல்வம் சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் பெருமாளின் செல்போன் எண்ணின் மூலமாக அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்து, நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News January 11, 2026
கடலூர்: லட்சக் கணக்கில் மோசடி செய்தவர் கைது!

சிதம்பரத்தில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் செல்வம். இவரிடம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எஸ். பெருமாள் (39) என்பவர் தனியார் ஆப் மூலமாக லோன் வாங்கி தருவதாக கூறி ரூ.7,61,050 பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து செல்வம் சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் பெருமாளின் செல்போன் எண்ணின் மூலமாக அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்து, நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


