News August 16, 2024
கடலூரில் புதிய போக்குவரத்து சேவை

கடலூர் பேருந்து நிலையத்தில் பல்வேறு பகுதிகளுக்கான புதிய பேருந்து போக்குவரத்து சேவையினை மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், மாநகராட்சி ஆணையர் S. அனு IAS மற்றும் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன் ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர். உடன் போக்குவரத்து துறை அலுவலர்கள், தொமுச நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News September 15, 2025
கடலூர்: அரசு அலுவலகத்தில் திருட்டு

கடலூர் அருகே உள்ள கரையேறவிட்டகுப்பம் ஊராட்சியில் உள்ள வறுமை ஒழிப்பு அலுவலகத்தில் இருந்த 3 பேட்டரி மற்றும் மின் சாதன பொருட்களை மர்மநபர்கள் நேற்று திருடி சென்று விட்டனர். திருட்டு போன பொருட்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். இதுகுறித்து ஊராட்சி செயலாளர் வெங்கடகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில், கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
News September 15, 2025
கடலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கடலூர் மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கே க்ளிக் செய்து, உங்கள் சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பிறகு உங்க வீட்டு ‘கரண்ட் பில்’ தகவல் உங்க போனுக்கே வந்துடும். அதுபோல உங்கள் பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டால் 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நபர்களுக்கு SHARE பண்ணுங்க!
News September 15, 2025
கடலூர்: கார் மோதி சிறுவன் பரிதாப பலி

பாளையங்கோட்டை கீழ்பாதி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் மகன் மகேஷ் (12). இந்நிலையில் மகேஷ் நேற்று (செப்.14) தனது நண்பன் ஈஸ்வரன் (14) என்ற மாணவனுடன் காலை காடுவெட்டி நோக்கி சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது வானமாதேவி அருகே கும்பகோணம் நோக்கி சென்ற கார் ஒன்று சிறுவர்கள் பயணித்த சைக்கிள் மீது மோதியதில், மகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து சோழத்தரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.