News March 29, 2024
கடலூரில் பதநீர் விற்பனை படுஜோர்

கடலூர் பகுதியில் இன்று காலை முதல் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெயிலில் தலைகாட்ட முடியாமல் அவதி அடைந்துள்ளனர். சாலைகளிலும் வாகன போக்குவரத்து குறைந்தே காணப்பட்டது. மேலும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பதநீர் வாங்கி குடித்தனர். இதனால் பதநீர் விற்பனை படுஜோராக நடந்தது. இதில் 200 மில்லி பதநீர் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.
Similar News
News December 21, 2025
போராட்டத்தில் ஈடுபட்ட 35 விவசாயிகள் மீது வழக்கு

கடலூர் அடுத்த கொடுக்கன்பாளையம், மலைஅடிகுப்பம் ஊராட்சியில் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் நேற்று தொடங்கினர். இந்நிலையில் இன்று (டிச.21) நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 35 பேர் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News December 21, 2025
கடலூர்: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

கடலூர் மக்களே.. பட்டாவில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய பெயர்களை சேர்க்க வேண்டுமா?. இனி ஆன்லைன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் <
News December 21, 2025
விருத்தாசலத்தில் வந்தே பாரத் நின்று செல்ல அனுமதி

சென்னை- திருநெல்வேலி இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் இனி விருத்தாசலத்தில் நின்று செல்லும் என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதி அளித்துள்ளார். தொழில் மற்றும் பணி நிமித்தமாக, விரைவான பயணத்தை மேற்கொள்ள வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்ல வேண்டுமென்ற விருத்தாசலம் பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று ரயில்வே அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


