News March 29, 2024
கடலூரில் பதநீர் விற்பனை படுஜோர்

கடலூர் பகுதியில் இன்று காலை முதல் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெயிலில் தலைகாட்ட முடியாமல் அவதி அடைந்துள்ளனர். சாலைகளிலும் வாகன போக்குவரத்து குறைந்தே காணப்பட்டது. மேலும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பதநீர் வாங்கி குடித்தனர். இதனால் பதநீர் விற்பனை படுஜோராக நடந்தது. இதில் 200 மில்லி பதநீர் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.
Similar News
News November 17, 2025
கடலூர் மாவட்டத்தில் வேலை – கலெக்டர்

சுய உதவிக் குழு தயாரிப்புகளுக்கான பொது சந்தை வசதி மையத்தில் 1 மேலாளர், 1 கணக்காளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு பொருளாதாரம், வணிகத்தில் பட்டப் படிப்பு படித்தவர்கள், வரும் நவ.25-ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் 6380643904 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை பெற்று கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News November 17, 2025
கடலூர்: B.E படித்தவர்களுக்கு வேலை

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 115 Specialist Officers (SO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.64,820 – 1,20,940/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech, Master Degree, LLB, Post Graduate
5. வயது வரம்பு: 22-40 (SC/ST-45, OBC-43)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 17, 2025
கடலூர்: பட்டதாரி இளைஞர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டம் மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளில் சேருவதற்கான போட்டித்தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதில், மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் பங்கேற்க <


