News March 29, 2024

கடலூரில் பதநீர் விற்பனை படுஜோர்

image

கடலூர் பகுதியில் இன்று காலை முதல் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெயிலில் தலைகாட்ட முடியாமல் அவதி அடைந்துள்ளனர். சாலைகளிலும் வாகன போக்குவரத்து குறைந்தே காணப்பட்டது. மேலும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பதநீர் வாங்கி குடித்தனர். இதனால் பதநீர் விற்பனை படுஜோராக நடந்தது. இதில் 200 மில்லி பதநீர் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Similar News

News December 12, 2025

கடலூர்: Apply பண்ணா போதும்.. வேலை ரெடி!

image

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 41
3. வயது: 18 – 48
4. சம்பளம்: ரூ18,200 – ரூ.67,100
5. கல்வித்தகுதி: 12th & MLT (Medical Laboratory Technology)
6. கடைசி தேதி: 29.12.2025
7. விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News December 12, 2025

கடலூர்: ஆம்லெட் கிடைக்காததால் தற்கொலை!

image

நெல்லிக்குப்பம், திருகண்டேஸ்வரத்தைச் சேர்ந்தவர் சலவை தொழிலாளி செந்தில்குமார் (49). இவர் குடிபோதையில் வீட்டிற்கு வந்தபோது மனைவியிடம் ஆம்லெட் போட்டு தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவர் ஆம்லெட் போடாததால் விரக்தி அடைந்த அவர், தற்கொலைக்கு முயன்று, ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். நெல்லிக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 12, 2025

கடலூர்: டிராக்டர் வாங்க 50% மானியம்!

image

மத்திய அரசின் ‘பிரதம மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு பொருளாதார ரீதியாக நலிவடைந்த 18-60 வயதுடைய விவசாயிகள் மாவட்ட வேளாண் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் டிராக்டர் வாங்க வங்கிக் கடனும் வழங்கப்படுகிறது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…

error: Content is protected !!