News March 29, 2024

கடலூரில் பதநீர் விற்பனை படுஜோர்

image

கடலூர் பகுதியில் இன்று காலை முதல் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெயிலில் தலைகாட்ட முடியாமல் அவதி அடைந்துள்ளனர். சாலைகளிலும் வாகன போக்குவரத்து குறைந்தே காணப்பட்டது. மேலும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பதநீர் வாங்கி குடித்தனர். இதனால் பதநீர் விற்பனை படுஜோராக நடந்தது. இதில் 200 மில்லி பதநீர் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Similar News

News December 10, 2025

கடலூர்: 21 வயது; 6 வழக்குகள்; பாய்ந்த குண்டாஸ்

image

களையூர் ஏரிக்கரையில் நவ.18ம் தேதி சித்ரா என்பவரது கழுத்திலிருந்து தாலியை பறித்து சென்றது தொடர்பாக, தூக்கணாம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் வி.அகரம் ஜெயக்குமார் (21) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது 5 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் எஸ்.பி உத்தரவின் பெரில், ஜெயக்குமாரை ஆட்சியர் குண்டர் சட்டத்தில் அடைக்க நேற்று (டிச.08) உத்தரவிட்டார்.

News December 10, 2025

கடலூர்: 21 வயது; 6 வழக்குகள்; பாய்ந்த குண்டாஸ்

image

களையூர் ஏரிக்கரையில் நவ.18ம் தேதி சித்ரா என்பவரது கழுத்திலிருந்து தாலியை பறித்து சென்றது தொடர்பாக, தூக்கணாம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் வி.அகரம் ஜெயக்குமார் (21) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது 5 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் எஸ்.பி உத்தரவின் பெரில், ஜெயக்குமாரை ஆட்சியர் குண்டர் சட்டத்தில் அடைக்க நேற்று (டிச.08) உத்தரவிட்டார்.

News December 9, 2025

கடலூர் பகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

டிசம்பா் மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் டிசம்பர் 13-ம் தேதி நடைபெற உள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். வட்ட வழங்கல் அலுவலா் (அல்லது) நுகா்வோா் குறைதீா்வு அலுவலா் தலைமையில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!