News March 29, 2024
கடலூரில் பதநீர் விற்பனை படுஜோர்

கடலூர் பகுதியில் இன்று காலை முதல் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெயிலில் தலைகாட்ட முடியாமல் அவதி அடைந்துள்ளனர். சாலைகளிலும் வாகன போக்குவரத்து குறைந்தே காணப்பட்டது. மேலும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பதநீர் வாங்கி குடித்தனர். இதனால் பதநீர் விற்பனை படுஜோராக நடந்தது. இதில் 200 மில்லி பதநீர் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.
Similar News
News November 22, 2025
கடலூர்: மர்ம முறையில் இறந்த கிடந்த இளைஞர்

சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (28). ஜேசிபி ஆபரேட்டரான இவர் பணி நிமித்தமாக ரெட்டாகுறிச்சியில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அப்பகுதியில் மர்மமான முறையில் ராஜேஷ் இன்று இறந்து கிடந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், சிறுபாக்கம் போலீசார் ராஜேஷ் உடலை கைப்பற்றி அவர் எப்படி இறந்தார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 22, 2025
கடலூர்: சிறுமியிடம் அத்துமீறிய இளைஞர் கைது

நெல்லிக்குப்பம் அண்ணா நகரை சேர்ந்தவர் பிரதீஷ் குமார் (25). இவர் பண்ருட்டி பகுதியை சோ்ந்த 15 வயது சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, சிறுமியிடம் தவறான முறையில் சைகை காட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி பிரதீஷ் குமாரிடம் சிறுமி கேட்டபோது அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து பண்ருட்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து பிரதீஷ் குமாரை நேற்று கைது செய்தனர்.
News November 22, 2025
கடலூர்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

கடலூர் மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <


