News March 29, 2024
கடலூரில் பதநீர் விற்பனை படுஜோர்

கடலூர் பகுதியில் இன்று காலை முதல் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெயிலில் தலைகாட்ட முடியாமல் அவதி அடைந்துள்ளனர். சாலைகளிலும் வாகன போக்குவரத்து குறைந்தே காணப்பட்டது. மேலும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பதநீர் வாங்கி குடித்தனர். இதனால் பதநீர் விற்பனை படுஜோராக நடந்தது. இதில் 200 மில்லி பதநீர் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.
Similar News
News December 10, 2025
கடலூர்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

1. முதலில்,<
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
News December 10, 2025
கடலூர் எஸ்.பி.க்கு நினைவு பரிசு வழங்கல்

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கடந்த 2005 ஆம் ஆண்டு திருக்கோவிலூர் டி.எஸ்.பி. ஆக பணிபுரிந்த போது பவாரியா குற்றவாளிகளை பிடிப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இதையடுத்து தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்த கடலூர் எஸ்.பி. ஜெயக்குமாரை, பூவானிக் குப்பம் அரசு பள்ளியில் கடந்த 1981- 82-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் நேற்று சந்தித்து நினைவுபரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
News December 10, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழக அரசின் 2026-ம் ஆண்டுக்கான “கபீர் புரஸ்கார்” விருது ஆண்டுதோறும் தமிழக முதலமைச்சரால் குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. சமுதாய நல்லிணக்கத்தை காப்பதற்காக சிறப்பாக செயல்புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருதை பெற விரும்புவோர் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில், வரும் டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.


