News April 22, 2025

கடலூரில் திருப்பதி பெருமாள் தரிசனம்

image

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் உள்ளது. இங்கு மாதம்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு தீர்த்தத்தை பக்தர்களுக்கு நோய் தீர்க்கும் மருந்தாக தரப்படுகிறது. 500 ஆண்டுகளுக்கு முன் நாயக்க மன்னரால் கட்டப்பட்ட கோயில் இது. இக்கோயிலில் மூலவர் திருப்பதி வெங்கடாஜலபதி போல் காட்சி தருகிறார் என்பது சிறப்பம்சமாகும். பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..

Similar News

News November 23, 2025

கடலூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

கடலூர் மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க.!

News November 23, 2025

கடலூர் மாவட்டத்தில் 758.9 மி.மீ மழை பதிவு

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (நவ.23) காலை 8.30 மணி நிலவரப்படி, கொத்தவாச்சேரி 71 மி.மீ மழை, பரங்கிப்பேட்டை 61 மி.மீ மழை, சேத்தியாதோப்பு 56 மி.மீ மழை, புவனகிரி 52 மி.மீ மழை, வேப்பூர் 30 மி.மீ மழை என மாவட்டம் முழுவதும் 758.9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News November 23, 2025

கடலூர்: கொதிக்கும் அண்டாவில் விழந்த குழந்தை உயிரிழப்பு

image

காட்டுமன்னார்கோவில் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவரது 3 வயது குழந்தை சுஷாந்த் கடந்த 18ம் தேதி மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது, வீட்டின் வெளியே ஹோட்டலுக்காக குருமா செய்த அண்டாவில் தவறி விழுந்துள்ளார். இதில், பலத்த காயத்துடன் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக சென்னையில் அனுமதித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலன் இன்றி நேற்று குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!