News April 22, 2025
கடலூரில் திருப்பதி பெருமாள் தரிசனம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் உள்ளது. இங்கு மாதம்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு தீர்த்தத்தை பக்தர்களுக்கு நோய் தீர்க்கும் மருந்தாக தரப்படுகிறது. 500 ஆண்டுகளுக்கு முன் நாயக்க மன்னரால் கட்டப்பட்ட கோயில் இது. இக்கோயிலில் மூலவர் திருப்பதி வெங்கடாஜலபதி போல் காட்சி தருகிறார் என்பது சிறப்பம்சமாகும். பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..
Similar News
News October 18, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.17) இரவு 10 மணி முதல் இன்று (அக்.18) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.
News October 17, 2025
கடலூர்: அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவிப்பு

கழுதூர் கிராமத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டிருந்த ராஜேஸ்வரி, சின்னப்பொன்னு, கனிதா, பாரிஜாதம் ஆகிய 4 பெண்கள், மின்னல் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதும் இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், பாமக நிறுவனர் ராமதாஸ், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் அரசு அவர்களது குடும்பத்திற்கு நிவாரணம் வங்கவும் கோரிக்கை வைத்துள்ளனர்
News October 17, 2025
கடலூர்: ரூ.29,0000 மாத சம்பத்தில் அரசு வேலை

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40(SC/ST-45, OBC-43)
6.கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.