News April 22, 2025
கடலூரில் திருப்பதி பெருமாள் தரிசனம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் உள்ளது. இங்கு மாதம்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு தீர்த்தத்தை பக்தர்களுக்கு நோய் தீர்க்கும் மருந்தாக தரப்படுகிறது. 500 ஆண்டுகளுக்கு முன் நாயக்க மன்னரால் கட்டப்பட்ட கோயில் இது. இக்கோயிலில் மூலவர் திருப்பதி வெங்கடாஜலபதி போல் காட்சி தருகிறார் என்பது சிறப்பம்சமாகும். பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..
Similar News
News December 5, 2025
கடலூர்: BE /B.Tech படித்தவர்களுக்கு அரசு வேலை!

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45,OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: B.E / B.Tech, Diploma
6. கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News December 5, 2025
கடலூர் மாவட்டம் முழுவதும் 126.1 மில்லி மீட்டர் மழை பதிவு

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (டிசம்பர் 5) காலை 8.30 மணி நிலவரப்படி பெலாந்துறை 37.8 மில்லி மீட்டர், வேப்பூர் 13.5 மில்லி மீட்டர், காட்டுமைலூர் 11.2 மில்லி மீட்டர், மே.மாத்தூர் 10 மில்லி மீட்டர், லக்கூர் 9.1 மில்லி மீட்டர், பண்ருட்டி 9 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 126.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
News December 5, 2025
கடலூர் மாவட்டத்தில் 2.5 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் ?

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் இதுவரை நடந்த கணக்கெடுப்பில் இறப்பு, முகவரி மாற்றம், இரட்டைப் பதிவு, ஊரில் வசிக்காமை போன்ற காரணங்களுக்காக 2,62,650 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் வரும் 11-ம் தேதி வரை அவகாசம் இருப்பதால் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் ஒரு முறை சரிபார்க்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


