News March 25, 2025
கடலூரில் சிறுவன் கொலை வழக்கு: பெண்ணுக்கு இரட்டை ஆயுள்

பண்ருட்டி அடுத்த கீழக்கொல்லையை சேர்ந்தவர் செந்தில்நாதன் மகன் அஸ்வந்த் (4). கடந்த 26.1.2022 அன்று அதே பகுதியை சேர்ந்த முருகவேல் மகள் ரஞ்சிதா (26) என்பவர் முன்விரோதம் காரணமாக செந்தில்நாதன் மகன் அஸ்வந்தை கொலை செய்தார். இந்த நிலையில் சிறுவனை கொலை செய்த ரஞ்சிதாவுக்கு நேற்று கடலூர் ஏ.டி.ஜே. கோர்ட்டில் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சோபனா தேவி உத்தரவிட்டார்.
Similar News
News November 27, 2025
BREAKING: கடலூர் மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட்!

இலங்கை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளை மறுநாள் (நவ.29) மிக கண்மழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. SHARE NOW!
News November 27, 2025
கடலூர்: அரசு ஊழியர் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், கடலூர் மாவட்ட மக்கள் 04142-233816 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News November 27, 2025
கடலூர்: சிறுமியை திருமணம் செய்தவர் மீது வழக்கு

கடலூர் மாவட்டம், மிராளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (21). இவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறுமிக்கு குழந்தை பிறந்த நிலையில், போலீசாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சேத்தியாத்தோப்பு மகளிர் காவல் துறையினர் வாலிபர் மீது நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


