News May 17, 2024
கடலூரில் கணவன் மனைவியை கொன்ற சம்பவம்

கடலூர் துறைமுகம் சோனாங்குப்பம் பகுதியை சேர்ந்த ரமேஷ்.இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார்.ஊருக்கு வந்த நிலையில் தனது இரண்டாவது மனைவி சூர்யாவுக்கு வேறொருவருடன் தொடர்பு உள்ளதாக சந்தேகம் அடைந்த ரமேஷ் இன்று காலை சூர்யாவை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். தகவலறிந்த கடலூர் துறைமுகம் காவல்துறையினர் சூரியாவின் உடலை கைப்பற்றி தப்பியோடிய ரமேஷை வலை வீசி தேடி வருகின்றனர்.
Similar News
News December 8, 2025
கடலூர்: 10-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்; சிறுவன் கைது

விருத்தாசலத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனைக்கு அவரது பெற்றோர்கள் அழைத்து சென்றுள்ளனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் AWPS போலீசார் சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது பிளஸ்-2 மாணவனை கைது செய்து, கடலூர் சீர்திருத்தப் பள்ளியில் நேற்று அடைத்தனர்.
News December 8, 2025
கடலூர்: பள்ளி மாணவி தற்கொலை

ராமாபுரத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் மகள் தேவிகா (17). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஞானசேகரன் தன் மனைவியுடன் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த தேவிகா தூக்கில் சடலாக தொங்கியதை கண்டு, அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 8, 2025
கடலூர்: 56,000 பேருக்கு கால்நடை பராமரிப்பு கடன்

தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்காக கிசான் அட்டை மூலம் கறவை மாடுகள், ஆடுகள் போன்றவற்றை வாங்கவும், பராமரிப்பு செலவுகளுக்கும் வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை நான்கரை ஆண்டுகளில், கடலூர் மாவட்டத்தில் 56 ஆயிரத்து 674 பேருக்கு ரூ.220.61 கோடி மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


