News May 7, 2025
கடலூரில் எஸ்.ஐ., தேர்வுக்கு இலவச பயிற்சி

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் 1,299 சார்பு ஆய்வாளர் காலி பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதனை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல் அலுவலகம் வளாகத்தில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் 1.5.2025 அன்று இலவச பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9940056641, 9840789750, 9498152944 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். அரசு வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க
Similar News
News October 25, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.24) இரவு 10 மணி முதல் இன்று (அக்.25) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.
News October 24, 2025
கடலூர்: மாவட்ட வருவாய் அலுவலர் பணியிட மாற்றம்

கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மா.ராஜசேகரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்த மா. ராஜசேகரன் தூத்துக்குடி மாவட்ட நெடுஞ்சாலை (நில எடுப்பு பிரிவில்) சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் இன்று உத்தரவிட்டுள்ளார்.
News October 24, 2025
சிறுமையை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு

கடலூர், ஸ்ரீமுஷ்னத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, 12ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வாலிபரும் சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இதனால் இருவரும் தனிமையில் இருந்தாக கூறப்ப்டுகிறது. இந்நிலையில், சிறுமி 3 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


