News March 19, 2024

கடலூரில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்

image

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் மற்றும் தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முதற்கட்டமாக வருகின்ற 24 ஆம் தேதி முதல் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.இந்த நிலையில் கடலூரில் வருகின்ற மார்ச் 30 மாலை 6 மணிக்கு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

Similar News

News December 19, 2025

கடலூர் மாவட்டத்தில் நாளை கரண்ட் இருக்காது!

image

கடலூர் மாவட்டத்தில் நாளை (டிச.20) பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக கடலூர் டவுன், செம்மண்டலம், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, பெண்ணாடம், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, செம்மங்குப்பம், குள்ளஞ்சாவடி, தோப்புக்கொல்லை, கோரணப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

News December 19, 2025

கடலூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

image

ஒரு சர்க்கரை ஆலையின் எல்லைக்குட்பட்ட கரும்புகளை மற்ற சர்க்கரை ஆலைகளின் அரவைக்கு எடுத்துச் செல்வது கரும்பு கட்டுப்பாடு சட்டப்படி சட்ட விரோத செயலாகும். எனவே சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலை எல்லைக்குட்பட்ட புவனகிரி, சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம் பகுதி விவசாயிகள் தங்களது கரும்புகளை வேறு சர்க்கரை ஆலைகளுக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News December 19, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

image

முன்னாள் படைவீரர்களுக்கு நடப்பாண்டில் “முதல்வரின் காக்கும் கரங்கள்“ திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு ரூ.35,07,611 மானியத்துடன் கூடிய, ரூ.1,38,39,000 வங்கி கடனுதவி தொழில் தொடங்க ஏதுவாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளி முன்னாள் படைவீரர்களுக்கு பிரத்யோக ஸ்கூட்டர் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!