News August 8, 2024

கடலில் வீசப்பட்ட ரூ.3 கோடி தங்கம் மீட்பு

image

இலங்கையிலிருந்து ராமேஷ்வரத்துக்கு ரூ.3 கோடி மதிப்பிலான தங்கத்தை மர்ம கும்பல் கடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கல்பிட்டி தீவு அருகே ரோந்து பணியிலிருந்த இலங்கை கடற்படையினர் சந்தேகத்துக்கிடமான படகை நிறுத்துமாறு கூறியுள்ளனர். படகிலிருந்தவர்கள் பார்சலை கடலில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். வீசப்பட்ட தங்கத்தை இலங்கை கடற்படையினர் நேற்று மீட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 21, 2025

ராமநாதபுரம்: 5,810 காலியிடங்கள்.. கடைசி வாய்ப்பு! APPLY

image

ராமநாதபுரம் மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்கு நவ.20 கடைசி தேதி என குறிப்பிடப்பட்ட நிலையில், தற்போது நவ. 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,500 – ரூ.35,400. டிகிரி முடித்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 21, 2025

மண்டபம் அருகே சுத்தியலால் தாக்கி இலங்கை அகதி கொலை

image

மண்டபம் அகதிகள் முகாமில் வசிக்கும், இலங்கை மன்னாரை சேர்ந்த கவிராஜ், 27; மலைச்செல்வம், 35; மணிகண்டன், 32, ஆகியோர் நேற்று முன் தினம் அப்பகுதியில் மது அருந்தினர்.அப்போது,ஏற்பட்ட தகராறில் மலைச்செல்வம், வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து வந்து கவிராஜை தாக்கி தப்பினார். காயமடைந்த கவிராஜ், ராமநாதபுரம் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை இறந்தார்.

News November 21, 2025

திருவாடானை அருகே அரசு பஸ் மோதி ஒருவர் பலி

image

திருவாடானை அருகே அந்திவயல் கிராமத்தை சேர்ந்தவர் சிமியோன் 55. இவர் அறிவித்தியில் இருந்து அந்திவயலை நோக்கி டூவீலரில் சென்றார். அந்திவயல் அருகே சென்ற போது எதிரில் வந்த அரசு பஸ் மோதியது.மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிமியோன் இறந்தார். திருவாடானை போலீசார் அரசு பஸ் டிரைவர் புதுக்கோட்டை மாவட்டம் குளத்துாரை சேர்ந்த எழிலரசனை 41, கைது செய்தனர்.

error: Content is protected !!