News August 8, 2024

கடலில் வீசப்பட்ட ரூ.3 கோடி தங்கம் மீட்பு

image

இலங்கையிலிருந்து ராமேஷ்வரத்துக்கு ரூ.3 கோடி மதிப்பிலான தங்கத்தை மர்ம கும்பல் கடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கல்பிட்டி தீவு அருகே ரோந்து பணியிலிருந்த இலங்கை கடற்படையினர் சந்தேகத்துக்கிடமான படகை நிறுத்துமாறு கூறியுள்ளனர். படகிலிருந்தவர்கள் பார்சலை கடலில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். வீசப்பட்ட தங்கத்தை இலங்கை கடற்படையினர் நேற்று மீட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 6, 2025

ராமேஸ்வர பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அறிவிப்பு

image

இராமேஸ்வரம் -சென்னை சேது எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற டிச.07, 08 முதல் மீண்டும் சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இராமேஸ்வரம்- சென்னை சேது எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் சென்னை எழும்பூர் வரை சேது எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுவதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News December 6, 2025

ராமநாதபுரம்: கரண்ட் கட்.? இனி Whatsapp மூலம் தீர்வு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு – 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News December 6, 2025

ராமநாதபுரத்தில் இங்கெல்லாம் இலவச மருத்துவ முகாம்

image

இராமநாதபுரம் மாவட்டம், நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் தேவிபட்டினம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மற்றும் முதுகுளத்தூர் திருவரங்கம் திரு இருதய மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் இன்று (டிச.6) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பொது மக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் SHAREபண்ணுங்க

error: Content is protected !!