News August 8, 2024

கடலில் வீசப்பட்ட ரூ.3 கோடி தங்கம் மீட்பு

image

இலங்கையிலிருந்து ராமேஷ்வரத்துக்கு ரூ.3 கோடி மதிப்பிலான தங்கத்தை மர்ம கும்பல் கடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கல்பிட்டி தீவு அருகே ரோந்து பணியிலிருந்த இலங்கை கடற்படையினர் சந்தேகத்துக்கிடமான படகை நிறுத்துமாறு கூறியுள்ளனர். படகிலிருந்தவர்கள் பார்சலை கடலில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். வீசப்பட்ட தங்கத்தை இலங்கை கடற்படையினர் நேற்று மீட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 18, 2025

ராமநாதபுரம்: GPay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

image

ராமநாதபுரம் மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!

News December 18, 2025

ராமநாதபுரம்: 100 கிலோ கஞ்சா கண்டுபிடிப்பு

image

ராமநாதபுரம் மாவட்டம் க்யூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியாபுரம் அருகே இன்று திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கு ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி சுதர்ஷன் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவரிடம் விற்பனைக்காக 100 கிலோ கஞ்சா இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை பறிமுதல் செய்த போலீசார் சுதர்ஷனை கைது செய்தனர்.

News December 18, 2025

ராமநாதபுரம்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

ராமநாதபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!