News August 8, 2024

கடலில் வீசப்பட்ட ரூ.3 கோடி தங்கம் மீட்பு

image

இலங்கையிலிருந்து ராமேஷ்வரத்துக்கு ரூ.3 கோடி மதிப்பிலான தங்கத்தை மர்ம கும்பல் கடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கல்பிட்டி தீவு அருகே ரோந்து பணியிலிருந்த இலங்கை கடற்படையினர் சந்தேகத்துக்கிடமான படகை நிறுத்துமாறு கூறியுள்ளனர். படகிலிருந்தவர்கள் பார்சலை கடலில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். வீசப்பட்ட தங்கத்தை இலங்கை கடற்படையினர் நேற்று மீட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 16, 2025

ராமநாதபுரத்தில் போலீசில் சேர ஆசையா

image

தமிழகத்தில் சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சமீபத்தில் 3665 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டது. இப்பயிற்சிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக இலவச கட்டணமில்லா பயிற்சி வகுப்பு (செப்.16)தேதி இன்று துவங்கப்பட உள்ளது. இதில் சேர்வதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அழைப்பு விடுத்துள்ளார்.

News September 16, 2025

இராமேஸ்வரத்தில் இன்று முதல் துவக்கம்

image

இராமநாதபுரம்- இராமேஸ்வரம் வரை ரயில் பாதை மின் மயமாக்கப்பட்டு கடந்த செப்.13-ல் சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டம் வெற்றி அடைந்ததை தொடந்து இன்று செப்.16 முதல் திருச்சி-இராமேஸ்வரம், கோயம்புத்தூர்-இராமேஸ்வரம், ஒகா-இராமேஸ்வரம் ஆகிய ரயில்கள் மின் இன்ஜினில் இயங்கும் எனவும் செப்.21 முதல் இராமேஸ்வரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரயில்களும் மின் இன்ஜினில் இயங்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 16, 2025

ராமநாதபுரத்தில் கட்டணமில்லா இலவச காவலர் பயிற்சி வகுப்பு

image

தமிழகத்தில் சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சமீபத்தில் 3665 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டது. இந்த பயிற்சிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக இலவச கட்டணமில்லா பயிற்சி வகுப்பு (செப்.16)தேதி இன்று துவங்கப்பட உள்ளது. இதில் சேர்வதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!