News August 8, 2024
கடலில் வீசப்பட்ட ரூ.3 கோடி தங்கம் மீட்பு

இலங்கையிலிருந்து ராமேஷ்வரத்துக்கு ரூ.3 கோடி மதிப்பிலான தங்கத்தை மர்ம கும்பல் கடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கல்பிட்டி தீவு அருகே ரோந்து பணியிலிருந்த இலங்கை கடற்படையினர் சந்தேகத்துக்கிடமான படகை நிறுத்துமாறு கூறியுள்ளனர். படகிலிருந்தவர்கள் பார்சலை கடலில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். வீசப்பட்ட தங்கத்தை இலங்கை கடற்படையினர் நேற்று மீட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 23, 2025
பாம்பனில் காவலாளி மர்மசாவு கொலையா? போலீஸ் விசாரணை

பாம்பன் அன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் அன்சாரி (வயது 61). இவர் அதே பகுதியில் உள்ள தோப்பு ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பாம்பனில் உள்ள டாஸ்மாக் கடை அருகே தலையில் காயம் ஏற்பட்டு ரத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். சிகிச்சைக்காக அன்சாரி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அன்சாரி நேற்று இறந்தார்.
News November 23, 2025
திருப்பாலைக்குடியில் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் சற்று நேரத்திற்கு முன்பு சாலையில் பயணித்த இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி சம்பவ இடத்தில்லேயே இறந்துள்ளார். யாரென்று அடையாளம் காண முடியவில்லை. இவரின் உறவினர்கள் குறித்து திருப்பாலைக்குடி போலீசார் விசாரித்தவர் வருகின்றனர்.
News November 23, 2025
திருப்பாலைக்குடியில் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் சற்று நேரத்திற்கு முன்பு சாலையில் பயணித்த இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி சம்பவ இடத்தில்லேயே இறந்துள்ளார். யாரென்று அடையாளம் காண முடியவில்லை. இவரின் உறவினர்கள் குறித்து திருப்பாலைக்குடி போலீசார் விசாரித்தவர் வருகின்றனர்.


