News August 8, 2024

கடலில் வீசப்பட்ட ரூ.3 கோடி தங்கம் மீட்பு

image

இலங்கையிலிருந்து ராமேஷ்வரத்துக்கு ரூ.3 கோடி மதிப்பிலான தங்கத்தை மர்ம கும்பல் கடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கல்பிட்டி தீவு அருகே ரோந்து பணியிலிருந்த இலங்கை கடற்படையினர் சந்தேகத்துக்கிடமான படகை நிறுத்துமாறு கூறியுள்ளனர். படகிலிருந்தவர்கள் பார்சலை கடலில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். வீசப்பட்ட தங்கத்தை இலங்கை கடற்படையினர் நேற்று மீட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 10, 2025

ராமநாதபுரம்: சிறுமி கர்ப்பம்., இளைஞர் மீது போக்சோ!

image

தொண்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், ஆரியமணி (20) என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமிக்கு உடல் பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு சென்றுள்ளனர், அங்கு அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் திருவாடனை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். திருவாடனை போலீஸார் ஆரியமணி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

News December 10, 2025

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

image

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் லேசான முதல் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச 10) ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி, குமரி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனை எலோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News December 10, 2025

மண்டபம் வட கடல் விசைப் படகுகள் தொழிலுக்கு செல்ல தடை

image

வங்கக்கடலில் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 60 கிமீ வரை நாளை (டிச.10) வீசக்கூடும். இதனால் மண்டபம் வடகடல் விசைப்படகுகளுக்கு மீன்பிடி அனுமதிச்சீட்டு நாளை (டிச.10) வழங்கப்பட மாட்டாது. வட, தென் கடல் நாட்டுப் படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மண்டபம்
மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!