News April 13, 2025

கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

image

அஞ்சுகிராமம், ரஸ்தாகாடு கடற்கரை உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று கடலில் குளிப்பதற்காக கன்னங்குளம் பகுதியைச் சேர்ந்த 3 மாணவர்கள் சென்றுள்ளனர். இதில் கல்லூரி மாணவர் ஒருவர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார். உடன் சென்ற 2 பள்ளி மாணவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கடலோர பாதுகாப்பு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 20, 2025

குமரி: வேலைதேடும் இளைஞர்கள் கவனத்திற்கு!

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி செய்தி குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (நவ 21) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம் மூலம் நடத்தப்படும் இம்முகாமில் வேலை தேடும் இளைஞர்கள் பங்கேற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News November 20, 2025

குமரி: கடிதம் எழுதிவைத்துவிட்டு முதியவர் தற்கொலை

image

ஆசாரிப்பள்ளம் சந்தனராஜ் (67) 32 ஆண்டுகள் சவுதி அரேபியாவில் கட்டிட கான்ட்ராக்டராக வேலை பார்த்து, சமீபத்தில் ஊருக்கு வந்திருந்தார். கடந்த 17ம் தேதி வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ரோஸ் நகர் கொட்டகையில் நவ 18ம்தேதி தூக்கிட்டு இறந்த நிலையில் அவரது உடலை ஆசாரிபள்ளம் போலீசார் மீட்டனர். சொத்து, மன ரீதியான பிரச்சினை தொடர்பாக தற்கொலை செய்வதாக அவர் எழுதிய கடிதத்தை போலீசார் மீட்டனர்.

News November 20, 2025

கன்னியாகுமரியில் மதில் சுவரில் மோதிய பேருந்து

image

கன்னியாகுமரியில் அய்யப்ப சாமி பக்தர் வாகனம் மதில் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் 20 நிமிடத்தில் வாகனத்தை வெளியேற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தற்போது அய்யப்ப பக்தர்கள் சீசன் காலம் நடைபெற்று வருகிறது. இதனால் நாள்தோறும் காலை முதல் இரவு வரை ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பஸ், டெம்போ டிராவல்ஸ் உள்ளிட்ட வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

error: Content is protected !!