News April 13, 2025
கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

அஞ்சுகிராமம், ரஸ்தாகாடு கடற்கரை உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று கடலில் குளிப்பதற்காக கன்னங்குளம் பகுதியைச் சேர்ந்த 3 மாணவர்கள் சென்றுள்ளனர். இதில் கல்லூரி மாணவர் ஒருவர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார். உடன் சென்ற 2 பள்ளி மாணவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கடலோர பாதுகாப்பு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 6, 2025
குமரி: கம்மி விலையில் பைக், கார் வேண்டுமா? சூப்பர் வாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். 7 இருசக்கர வாகனங்கள், 7 ஆட்டோக்கள், 4 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 18 வாகனங்கள் இம்மாதம் 9ம் தேதி ஏலம் விடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஏலம் நடைபெறும் என்று உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் நேற்று தெரிவித்துள்ளார்.
News December 6, 2025
குமரி: தண்டவாளத்தில் தலை வைத்து மாணவர் தற்கொலை

தக்கலை அருகே ரயில் தண்டவாளத்தில் நேற்று தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞர் சடலம் கிடந்துள்ளது. அப்பகுதி ரயில் டிரைவர் கொடுத்த தகவல் அடிப்படையில் நாகர்கோவில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். விசாரணையில், உயிரிழந்த இளைஞர், வேளாங்கோடு பகுதியை சேர்ந்த தாமோதரன் மகன் பவித்ரன்(18) என்பதும், அவர் நாகர்கோவில் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் விசாரணை.
News December 6, 2025
குமரி: இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

குமரி மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தெங்கம்புதூர், பறக்கை, ஐ.எஸ்.இ.டி., மேலமணக்குடி, முகிலன்விளை, மதுசூதனபுரம், புதூர், ஈத்தாமொழி, தர்மபுரம், பொட்டல், வெள்ளாளன்விளை, பிள்ளையார்புரம், புத்தளம், புத்தன்துறை, ராஜாக்கமங்கலம், ஆலன்கோட்டை, பருத்திவிளை, காக்காதோப்பு, ஆலுவிளை, மருதங்கோடு, புலியூர்சாலை, அருமனை, பளுகல், களியக்காவிளை, விளவங்கோடு, கழுவன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள். SHARE


