News April 13, 2025
கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

அஞ்சுகிராமம், ரஸ்தாகாடு கடற்கரை உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று கடலில் குளிப்பதற்காக கன்னங்குளம் பகுதியைச் சேர்ந்த 3 மாணவர்கள் சென்றுள்ளனர். இதில் கல்லூரி மாணவர் ஒருவர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார். உடன் சென்ற 2 பள்ளி மாணவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கடலோர பாதுகாப்பு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 14, 2025
1500 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்: அதிகாரிகள் நடவடிக்கை

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு அரிசி கடத்திச் செல்லப்படுவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரிகள் இன்று மேற்கொண்ட சோதனையில் காஞ்சிரக்கோடு எந்த இடத்தில் காரில் கடத்திச் செல்லப்பட்ட 1500 கிலோ ரேஷன் அரிசியை கண்டுபிடித்தது பறிமுதல் செய்தனர். இது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
News November 14, 2025
நாகர்கோவிலில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்து

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் நாகர்கோவிலில் இருந்து பம்பைக்கு இம்மாதம் பதினாறாம் தேதி முதல் ஜனவரி மாதம் இருபதாம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அரசு போக்குவரத்து கழகம் இன்று தெரிவித்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து காலை 6 மாலை 6:30 இரவு 7 மற்றும் 7:30 மணிகளில் இந்தப் பேருந்து இயக்கப்பட உள்ளது. (இதன் பயண கட்டணம் ரூ.364) SHARE
News November 14, 2025
குமரியில் 3 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை

தேங்காபட்டணம் பகுதியை சேர்ந்த சிறுமிக்கு 2020-ம் ஆண்டு பாலியல் தொல்லை அளித்த இஸ்மாயில்(34), ஜாகீர் உசேன்(53), அப்துல் ஜபர்(67), முள்ளூர்துறை சகாயதாசன்(52),சுந்தரய்யா மீது குளச்சல் மகளிர் போலீசார் வழக்கு பதிந்தனர். நாகர்கோவில் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்த விசாரணையில் நேற்று நீதிபதி சுந்தரய்யா, இஸ்மாயில் உயிரிழந்த நிலையில் ஏனைய 3 பேருக்கும் தலா 5 ஆண்டு சிறை, ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


