News April 1, 2025

கடலில் மாயமான மீனவர் உடல் கரை ஒதுங்கியது

image

மயிலாடுதுறை மாவட்டம் குட்டியாண்டியூரைச் சேர்ந்த குமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் லட்சுமணன், சந்தோஷ், நவலிங்கம் ஆகிய மூவரும் சனிக்கிழமை மதியம் கடலுக்கு சென்றனர். கோடியக்கரைக்கு 12 நாட்டுக்கல் மைல் தொலைவில் மீன் பிடிக்க வலை விரிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கும்போது படகின் டிரைவர் லட்சுமணனை படகில் காணவில்லை. இந்த நிலையில் வேளாங்கண்ணி கடற்கரையில் கரை ஒதுங்கியது.

Similar News

News November 23, 2025

நாகை: வெளுக்க போகும் மழை – எச்சரிக்கை!

image

தென்கிழக்கு வாங்க் கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என்றும், இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.23) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News November 23, 2025

நாகையில் அதிகபட்சமாக 4.2செ.மீ மழை பதிவு

image

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் பரவலாக விட்டுவிட்டு மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரங்கள் நாகை 4.2செ.மீ, திருப்பூண்டி 2.6செ.மீ, வேளாங்கண்ணி 3.9செ.மீ திருக்குவளை 3.4செ.மீ தலைஞாயிறு 1.6செ.மீ வேதாரண்யம் 3.8செ.மீ, கோடியக்கரை 2.6செ.மீ‌ ஆகவும், மாவட்டத்தில் பதிவான மொத்த மழையின் சராசரி அளவு 3.1செ.மீ பதிவாகியுள்ளது

News November 23, 2025

நாகை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை -எச்சரிக்கை

image

நாகை மாவட்டத்தில் நேற்று(நவ. 22) இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதால் மீனவர்கள் வருகின்ற நவ.24ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

error: Content is protected !!