News April 21, 2025

கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ஆறகழூர் அஷ்டபைரவர் கோயில்

image

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே ஆறகளூரில் அமைந்துள்ளது காமநாதீஸ்வரர் கோயில். மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது நம்பிக்கை. கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

Similar News

News December 5, 2025

சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

சேலம் மாவட்ட காவல்துறை, குற்றங்களை தடுக்கும் முயற்சியாக ‘மூன்றாவது கண்’ திட்டத்தை வலுப்படுத்தி வருகிறது. பொதுமக்கள், கடைகாரர்கள் தங்களது வீடு, கடை, வீதிகளில் சிசிடிவி கேமிரா பொருத்துமாறு போலீசார் கேட்டுள்ளனர். குற்றச்சம்பவங்களை பதிவு செய்து குற்றவாளிகளை அடையாளம் காண சிசிடிவி முக்கிய உதவியாக இருக்கும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

News December 5, 2025

பெண்களுக்கான மசாலா தயாரிப்பு பயிற்சி!

image

ISRED நிறுவனம் சார்பில் சேலம் பெண்களுக்கு மசாலா தயாரிப்பு பயிற்சி குறைந்த கட்டணத்தில் டிசம்பர் 13ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் சாம்பார் பொடி, ரசம் பொடி, சிக்கன் மசால், மட்டன் மசால், சுக்கா மசால், கரம் மசால், கூட்டு மசால் போன்ற பல்வேறு மசாலா பொருட்கள் தயாரிப்பு நேரடியாக கற்பிக்கப்படும். பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 8300852717 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

News December 5, 2025

சேலம் விமான நிலையத்திற்கு பயணிகள் கோரிக்கை!

image

சேலம் மாவட்டம் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும், அலையன்ஸ் ஏர் நிறுவனம், அடிக்கடி தனது சேவையை ரத்து செய்து வருவதால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், எனவே இதுபோன்று அடிக்கடி ரத்து செய்யாமல் பயணிகளின் நலன் கருதி, முறையாக விமான சேவை இயக்க வேண்டும் என்று பயணிகள், காமலாபுரம் விமான நிலையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!