News March 27, 2025
கடன் தொல்லையை தீர்க்கும் திருச்சேறை சாரநாத பெருமாள்

திருச்சேரை சாரநாதப் பெருமாள் கோயில்108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகும். இது 1000 ஆண்டு பழமையான கோயிலாகும். இங்குள்ள பெருமாளை ஒருமுறை வணங்கினால் காவிரியில் 108 முறை நீராடிய பலன் கிடைக்குமாம். கடன் தொல்லை நீங்க, செல்வம் பெருக, வறுமை விலக திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில், உத்தமர் கோயில், புருஷோத்தம பெருமாள் கோயில் ஆகிய கோயில்களைப் போற்றி வணங்கலாம். இந்த தகவலை SHARE செய்யவும்
Similar News
News November 28, 2025
தஞ்சை: மின்சாரம் தாக்கி பரிதாப பலி

பட்டுக்கோட்டை கரிக்காடு அண்ணா குடியிருப்பு பகுதியில் பறந்து வந்த ஆண் மயில் ஒன்று மின்சார கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறை அலுவலர் பிரவீன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மயிலை மீட்டனர். மீட்கப்பட்ட மயில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதால், வனத்துறையினர் அதனை குழி தோண்டி புதைத்தனர்.
News November 28, 2025
தஞ்சை: ஒருதலை காதலிக்கு கொலை மிரட்டல்!

தஞ்சையை அருகே மானோஜிப்பட்டி சோழன் நகர் பகுதியை சேர்ந்த பரணி (30) என்ற கூலித் தொழிலாளி, தஞ்சையை சேர்ந்த பட்டதாரி பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார். பெண் காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த பரணி, இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று திருமணம் செய்யாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரின்பேரில் வல்லம் போலீசார் வழக்குப் பதிந்து பரணியை கைது செய்தனர்.
News November 28, 2025
தஞ்சை: புயல் அவசர உதவி எண்கள்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், தஞ்சை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் உங்கள் பகுதியில் மழை / புயலால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மையம் 1070, மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் 1077 அழைத்தால் போதும், உடனடியாக உதவி அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க!


