News August 2, 2024
கடன் செயலி மிரட்டல் பெண் தற்கொலை

தூத்துக்குடி பால்பாண்டி நகரை சேர்ந்தவர் காவிய சுதா (22) திருமணம் ஆகி சில மாதங்களே ஆகியுள்ளன. இவர் கடன் செயலி மூலம் ரூபாய் ஒரு லட்சம் கடன் பெற்றுள்ளார். இதில் பாதியை கட்டி உள்ள நிலையில் இரண்டு மாதங்களாக பணம் கட்டாததால் செயலியை சேர்ந்தவர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் மனமடைந்த காவிய சுதா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிப்காட் போலீசார் விசாரணை நடத்தினர்.
Similar News
News November 26, 2025
தூதுக்குடி: PF-ல் சந்தேகமா? நாளை சிறப்பு முகாம்!

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் நாளை (நவ. 27) ESI, PF குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில், இஎஸ்ஐ காப்பீட்டாளர்கள், பயனாளர்கள், வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், ஓய்வு ஊதியம் பெறுவோர், தொழிலதிபர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என இணை இயக்குனர் பாஸ்கர் தெரிவித்துள்ளார். SHARE
News November 26, 2025
தூத்துக்குடி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தூத்துக்குடி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 26, 2025
தூத்துக்குடி: ஆட்டோ கவிழ்ந்து குழந்தை பலி

தூத்துக்குடி: வேம்பாரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் அந்தோணி மைக்கேல் ராஜ் தனது ஒரு வயது மகன் மித்ரன் மற்றும் மனைவியுடன் சாயல்குடிக்கு நேற்று ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது, கடற்கரை சாலையில் திடீரென ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காயம் அடைந்த மித்ரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


