News January 2, 2025
கடந்த ஆண்டில் புதுச்சேரியில் 7250 வழக்குகள் பதிவு

புதுச்சேரியில் டிஜிபியாக சாலினி சிங் செயல்பட்டு வருகிறார் சட்டம் ஒழுங்கு போக்குவரத்து உள்ளிட்டவைகளுக்கு தனித்தனியாக போலீஸ் நிலையங்கள் உள்ளது இந்த நிலையில் புதுச்சேரி காரைக்கால் மாகி ஏனாம் ஆகிய பகுதிகளில் சட்டம் ஒழுங்கு போக்குவரத்து போலீஸ் நிலையங்களில் மற்றும் இதர போலீஸ் நிலையங்களில் என மொத்தம் கடந்த ஆண்டு 7250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்
Similar News
News November 6, 2025
புதுவை: மர்மமான முறையில் கூலி தொழிலாளி இறப்பு

பாகூர் அடுத்த பெரிய ஆராய்ச்சிக்குப்பத்தை சேர்ந்தவர் முத்து, சுமை தூக்கும் தொழிலாளியான இவர் நேற்று அதிகாலை 2:30 மணியளவில், வீட்டில் இருந்து வேலைக்கு சென்றார். பின், பெரிய ஆராய்ச்சி குப்பதில் சாலையோரமாக மாடுகள் கட்டி வைக்கப்பட்டு இருந்த இடத்தில், தலையில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து எவ்வாறு இறந்தார் என விசாரித்து வருகின்றனர்.
News November 6, 2025
புதுவை ஜிப்மெரில் பிரெஞ்சு-இந்தியா கூட்டு கல்வி திட்டம்

புதுவை ஜிப்மரில் தாவரங்கள், AI மூலம் மருத்துவ கல்வி ஆராய்சிக்கான இந்திய, பிரெஞ்சு கூட்டு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா, பிரான்சை சேர்ந்த தலா 4 கல்வி நிறுவனங்கள், கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு, கல்வியை பரிமாறுகின்றன. இத்திட்டத்தை புதுவை பிரெஞ்சு தூதர் எட்டியென் ஹாலண்ட், பிரெஞ்சு ஒருங்கிணைப்பாளர் அன்டோயின் நில்லேமெட், ஜிப்மர் இயக்குனர் வீர்சிங் நேகி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
News November 6, 2025
புதுவை: தேர்வு இல்லை-அரசு வேலை!

அணுசக்தித் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: 405
3. கல்வித் தகுதி: 10th & ITI Pass in respective trades
4.சம்பளம்: ரூ.9,600 – ரூ.10,560
5. கடைசி நாள்: 15.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…


