News January 2, 2025
கடந்த ஆண்டில் புதுச்சேரியில் 7250 வழக்குகள் பதிவு

புதுச்சேரியில் டிஜிபியாக சாலினி சிங் செயல்பட்டு வருகிறார் சட்டம் ஒழுங்கு போக்குவரத்து உள்ளிட்டவைகளுக்கு தனித்தனியாக போலீஸ் நிலையங்கள் உள்ளது இந்த நிலையில் புதுச்சேரி காரைக்கால் மாகி ஏனாம் ஆகிய பகுதிகளில் சட்டம் ஒழுங்கு போக்குவரத்து போலீஸ் நிலையங்களில் மற்றும் இதர போலீஸ் நிலையங்களில் என மொத்தம் கடந்த ஆண்டு 7250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்
Similar News
News October 15, 2025
புதுவை: மறுவாழ்வு மையத்தில் இருந்தவர் தற்கொலை

அரியாங்குப்பம் உப்புக்கார வீதியைச் சேர்ந்தவர் டிரைவர் சிவபாண்டியன் (52). இவருக்கு மது பழக்கம் இருந்ததால் இவர் வானூர் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர் வீடு திரும்பிய அவர், மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் சிவபாண்டியன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News October 15, 2025
புதுவை: போலீசாரிக்கு 93 புதிய வாகனங்கள் வழங்கல்

புதுச்சேரி கோரிமேடு ஆயுதப்படை வளாகத்தில், காவல்துறை சார்பில் காவல்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் பிள்ளைகளுக்காக போட்டித் தேர்வுகளுக்கான காவலர் கற்றல் மையம் நேற்று தொடங்கப்பட்டது. மேலும் சுமார் ரூ.8.50 கோடி மதிப்பில் 93 புதிய வாகனங்கள் இன்னோவா, எர்டிகா, பொலேரோ, ஆம்புலன்ஸ், இன்டர்செப்டர் வாகனங்கள் காவல்துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த விழாவில் உள்துறை அமைச்சர், சபாநாயகர் கலந்து கொண்டனர்.
News October 15, 2025
புதுச்சேரி: வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை

புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில், முத்தியால் பேட்டை தொகுதிக்கான வளர்ச்சிப் பணிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இக்கூடத்தில் தொகுதியில் மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை விரைவில் துவங்குவது, முக்கிய வீதிகளில் சாலைகளை மேம்படுத்துவது உள்ளிட்ட ஆலோசனை மேற்கொண்டனர்.