News January 2, 2025

கடந்த ஆண்டில் புதுச்சேரியில் 7250 வழக்குகள் பதிவு

image

புதுச்சேரியில் டிஜிபியாக சாலினி சிங் செயல்பட்டு வருகிறார் சட்டம் ஒழுங்கு போக்குவரத்து உள்ளிட்டவைகளுக்கு தனித்தனியாக போலீஸ் நிலையங்கள் உள்ளது இந்த நிலையில் புதுச்சேரி காரைக்கால் மாகி ஏனாம் ஆகிய பகுதிகளில் சட்டம் ஒழுங்கு போக்குவரத்து போலீஸ் நிலையங்களில் மற்றும் இதர போலீஸ் நிலையங்களில் என மொத்தம் கடந்த ஆண்டு 7250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்

Similar News

News September 15, 2025

புதுவை: மூட்டு வலியால் மூதாட்டி தற்கொலை

image

வில்லியனூர், பிள்ளையார் குப்பத்தைச் சேர்ந்தவர்கள் வீரப்பன்-விருத்தாம்பாள் தம்பதியர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். விருத்தாம்பாள் கடந்த சில ஆண்டுகளாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று முன்தினம் அவரது வீட்டின் கழிவறையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News September 15, 2025

புதுவை: நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

image

புதுவை, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் செய்திக்குறிப்பில், “எதிர்வரும் பருவமழை காலத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால், வெளிப்புறத்தில் பேனர் வைப்பது பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும். எனவே, அனுமதியில்லாமல் பேனர் வைக்கக்கூடாது அப்படி அனுமதி பெறாமல் வைக்கப்படும் பட்சத்தில் அந்த பேனர் வைத்தவர்கள் மீதும், அதனை பிரிண்ட் செய்தவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என கூறியுள்ளார்.

News September 15, 2025

காரைக்காலில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

image

காரைக்காலில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் (15.09.2025) திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் தலைமையில், அனைத்துத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆட்சியர் வளாகத்தில் காலை 09.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை நடைபெறும். மேலும் இந்த குறைதீர்ப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.

error: Content is protected !!