News April 19, 2025

கடத்தப்பட்ட தொழிலதிபர் நாக்பூரில் மீட்பு?

image

மதுரை பீபிகுளத்தை சேர்ந்த கருமுத்து சுந்தரராமன் (56) என்பவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனது நிலத்தை ஆக்கிரமித்து, அதை வீட்டு மனைகளாக மாற்றி சிலர் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14 அன்று கடத்தப்பட்டார். இந்நிலையில், அவர் நாக்பூரில் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Similar News

News January 7, 2026

மதுரை: வீட்டில் தனியாக இருந்த பெண் தற்கொலை

image

மதுரை அருகே ஆர்.வி.பட்டியை சேர்ந்­த­வர் செந்­தில் என்பவரது மனைவி கலை­யரசி (37). செந்­தில் திரு­விழா கடை­க­ளில் பேன்சி பொருள்­கள் விற்­பனை செய்து வரு­கி­றார். கலை­யரசி
மன­நிலை பாதிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் அதற்­கு சிகிச்­சை பெற்று வந்­துள்ளார். வீட்­டில் தனி­யாக இருந்­த அவர் நேற்று தூக்கிட்டு தற்­கொலை செய்து கொண்­டார். இச்சம்பவம் குறித்து திரு­ந­கர் போலீ­சார் விசா­ரிக்கின்றனர்.

News January 7, 2026

மதுரையில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

மதுரை மேலூர் அருகே தெற்குதெருவை சேர்ந்தவர் பாண்டி மகன் கணேசன் (24). திருமணமாகாத இவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்துள்ளது. சில நாட்களாக மன அழுத்தத்தில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 7, 2026

மதுரைக்கு பொங்கல் பரிசாக ரூ.283 கோடி!

image

தமிழ்நாடு அரசு இந்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 மற்றும் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை வழங்கவுள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் 9,46,728 ரேஷன் அட்டை தாரர்கள் இதன் மூலம் பயன்பெறுகின்றனர். இதன்படி, மதுரை மாவட்டத்திற்கு மட்டும் ரூ.3,000 பொங்கல் பரிசு தொகைக்காக 283 கோடியே 85 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. SHARE

error: Content is protected !!