News April 19, 2025

கடத்தப்பட்ட தொழிலதிபர் நாக்பூரில் மீட்பு?

image

மதுரை பீபிகுளத்தை சேர்ந்த கருமுத்து சுந்தரராமன் (56) என்பவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனது நிலத்தை ஆக்கிரமித்து, அதை வீட்டு மனைகளாக மாற்றி சிலர் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14 அன்று கடத்தப்பட்டார். இந்நிலையில், அவர் நாக்பூரில் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Similar News

News January 6, 2026

JUST IN : மதுரை வந்தார் முதல்வர்

image

மதுரை விமான நிலையத்தில் இன்று (ஜன.06) தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தந்தார். இதில் அமைச்சர் மூர்த்தி, கட்சியின் உயர்நிலை தலைவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் விமான நிலையத்தில் வரவேற்று, உற்சாக வாழ்த்து தெரிவித்தனர். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து திண்டுக்கல்லில் அரசு நிகழ்ச்சிகளில் நாளை கலந்து கொள்ள உள்ளார்.

News January 6, 2026

மதுரை: கூட்டு பட்டாவை இனி EASY – ஆ மாத்தலாம்..

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <>இங்கு க்ளிக்<<>> செய்து, பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் ஆப்ஷனை தேர்ந்தெடுத்து தனி பட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30-60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE IT

News January 6, 2026

மதுரை: முதல்வர் வருகை; ட்ரோன் பறக்க தடை

image

முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையிலிருந்து மதுரை வருகை தந்து, தனியார் விடுதியில் ஓய்வெடுக்கிறார். நாளை திண்டுக்கல்லில் அரசு விழாவில் கலந்து கொண்டு, பின்னர் மதுரை விமான நிலையம் வழியாக சென்னைக்கு புறப்படுகிறார். இதனை முன்னிட்டு, மதுரை விமான நிலையம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், முதல்வர் பயணிக்கும் வழிகள் மற்றும் மதுரை மாவட்ட எல்லைக்குள் ட்ரோன்கள், பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!