News April 19, 2025

கடத்தப்பட்ட தொழிலதிபர் நாக்பூரில் மீட்பு?

image

மதுரை பீபிகுளத்தை சேர்ந்த கருமுத்து சுந்தரராமன் (56) என்பவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனது நிலத்தை ஆக்கிரமித்து, அதை வீட்டு மனைகளாக மாற்றி சிலர் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14 அன்று கடத்தப்பட்டார். இந்நிலையில், அவர் நாக்பூரில் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Similar News

News January 10, 2026

மதுரை: டூவீலர் விபத்தில் பரிதாப பலி

image

மதுரையை சேர்ந்த ஜோசப் மற்றும் பாலமணிகண்டன் ஆகியோர் டூவீலரில் மடப்புரம் வந்துள்ளனர். அப்போது, எதிரே தேனியை சேர்ந்த யோகேஷ்வரன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் ஜோசப், பாலமணிகண்டன், யோகேஷ்வரன், பூமா ஆகியோர் படுகாயமடைந்து மதுரை G.H-ல் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பாலமணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.

News January 10, 2026

மதுரை: 10th போதும்.. ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

மதுரை மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள்<> இங்கு கிளிக் <<>>செய்து (ஜன.11) நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.37,815 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள வேலைவாய்ப்பு தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

News January 10, 2026

அழகர்கோவில் அருகே கிடந்த ஆண் சடலம்

image

அழகர்கோவில் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள மேல்நிலைத் தொட்டி கீழே, சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக அ.வலையப்பட்டி விஏஓ விக்னேஷ் அப்பன்திருப்பதி போலீசில் புகார் செய்தார். அப்பன்திருப்பதி போலீசார் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார் ? எந்த ஊர்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!