News April 19, 2025
கடத்தப்பட்ட தொழிலதிபர் நாக்பூரில் மீட்பு?

மதுரை பீபிகுளத்தை சேர்ந்த கருமுத்து சுந்தரராமன் (56) என்பவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனது நிலத்தை ஆக்கிரமித்து, அதை வீட்டு மனைகளாக மாற்றி சிலர் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14 அன்று கடத்தப்பட்டார். இந்நிலையில், அவர் நாக்பூரில் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 7, 2026
மதுரை: வீட்டில் தனியாக இருந்த பெண் தற்கொலை

மதுரை அருகே ஆர்.வி.பட்டியை சேர்ந்தவர் செந்தில் என்பவரது மனைவி கலையரசி (37). செந்தில் திருவிழா கடைகளில் பேன்சி பொருள்கள் விற்பனை செய்து வருகிறார். கலையரசி
மனநிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். வீட்டில் தனியாக இருந்த அவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து திருநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 7, 2026
மதுரையில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மதுரை மேலூர் அருகே தெற்குதெருவை சேர்ந்தவர் பாண்டி மகன் கணேசன் (24). திருமணமாகாத இவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்துள்ளது. சில நாட்களாக மன அழுத்தத்தில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 7, 2026
மதுரைக்கு பொங்கல் பரிசாக ரூ.283 கோடி!

தமிழ்நாடு அரசு இந்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 மற்றும் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை வழங்கவுள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் 9,46,728 ரேஷன் அட்டை தாரர்கள் இதன் மூலம் பயன்பெறுகின்றனர். இதன்படி, மதுரை மாவட்டத்திற்கு மட்டும் ரூ.3,000 பொங்கல் பரிசு தொகைக்காக 283 கோடியே 85 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. SHARE


