News February 17, 2025
கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

அரக்கோணம் டவுன் போலீசார் வின்டர்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீசார் வருவதை கண்டு அங்கிருந்து தப்பியோட முயன்ற 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அதே பகுதியை சேர்ந்த துரைராஜ் (23) மற்றும் முத்துவைரம் (25) என்பதும் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் இருந்து சுமார் 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 17, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
News November 16, 2025
அரக்கோணத்தில் வாக்காளர் விண்ணப்பப் பதிவேற்ற பணிகள் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான முனைவர் ஜெ.யு. சந்திரகலா இன்று (நவ.16) அரக்கோணம் சட்டமன்றத் தொகையின் கீழ் உள்ள அரக்கோணம் நகராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். சரிபார்க்கப்பட்ட வாக்காளர் (SIR) விண்ணப்பங்கள் மொபைல் செயலி மூலம் பதிவேற்றப்படும் பணிகளை அவர் பரிசோதித்து, தேர்தல் செயல்முறை துல்லியமாக நடைபெற தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.
News November 16, 2025
இன்று இரவு காவல்துறை ரோந்து பட்டியல்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு பாதுகாப்பை மேம்படுத்த காவல்துறை ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரோந்து குழுவில் ராணிப்பேட்டை, ஆர்காட், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் காவல் நிலைய அதிகாரிகள் நேரடி கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் எவ்வித அவசரத்திலும் கட்டுப்பாட்டு அறை மற்றும் அருகிலுள்ள காவல் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


