News April 2, 2025

கஞ்சா, கள், சாராயம் விற்ற பெண்கள் உட்பட 63 பேர் கைது

image

அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் வசந்தா தலைமையில் அரூர் கோட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவலர்கள் கடந்த மாதம் நடத்திய சோதனையில், மதுபானம் விற்பனை செய்து 7 பெண்கள் உட்பட 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 661 மது பாட்டில்கள், 324 லிட்டர் கள், 2 கிலோ கஞ்சா, 32 லிட்டர் சாராயம் மற்றும் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நேற்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Similar News

News December 9, 2025

தருமபுரி: முதல்வர் முகாமில் 21,615 பேர் பயன் -ஆட்சியர் அறிவிப்பு!

image

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 21.04.2025 அன்று உயர் மருத்துவ சேவைகள் வழங்க மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் இதுநாள் வரை, மொத்தம் 21,615 பயனாளிகள் பயனடைந்தனர். என்று தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் இன்று (டிச.09) தகவல் தெரிவித்துள்ளார்.

News December 9, 2025

தருமபுரி: மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

image

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க.

News December 9, 2025

தருமபுரி: லஞ்சம் கேட்டால் உடனே CALL!

image

தருமபுரி மக்களே வருமானம், சாதி, குடிமை, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04342-260042) புகாரளிக்கலாம். இன்று உலக ஊழல் எதிர்ப்பு தினம் என்பதால் தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!