News January 2, 2025
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா

கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா மார்ச் 14, 15இல் நடைபெறும் என யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானபிரகாசம் தெரிவித்துள்ளார். மார்ச் 14 மாலை 4 மணியளவில் கொடியேற்றத்துடன் விழா துவங்கிறது. அதைத் தொடர்ந்து ஜெபமாலை, சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை, இரவு தேர் பவனி நடைபெற உள்ளது. மார்ச் 15 காலை 7:30 மணியளவில் சிறப்பு திருப்பலி, கூட்டுப் பிரார்த்தனை, கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.
Similar News
News December 2, 2025
ராமநாதபுரம் வாலிபரிடம் ரூ.10.92 லட்சம் மோசடி

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு சமூக வலைதளத்தில் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம் என சிலர் ஆசை காட்டியுள்ளனர். அதை நம்பி ரூ.11 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார். எந்த லாபமும் வராமல் மேற்கொண்டு பணம் கேட்டதால் சந்தேகம் அடைந்த வாலிபர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வாலிபர் அனுப்பிய கணக்கில் இருந்து ரூ.10.92 லட்சத்தை மீட்டு ஒப்படைத்தனர்.
News December 2, 2025
ராமநாதபுரம்: தெருக்களில் மக்கள் படகில் பயணம்

ராமேஸ்வரத்தில் டிட்வா’ புயலால் கனமழை பெய்து பாம்பன், தங்கச்சிமடத்தில், 200 வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பலரும் வீடுகளில் இருந்து உடைமைகளை லாரியில் ஏற்றி வெளியேறின மழைநீர் வீடுகளை சூழ்ந்ததால் உறவினர் வீட்டில் தங்கி இருந்த மக்கள் நேற்று தெர்மாகோல் படகில் சென்று வீடுகளை பார்வையிட்டு, முக்கிய ஆவணங்கள், உடைமைகளை சேகரித்து மீண்டும் உறவினர் வீடுகளுக்கு திரும்பினர்.
News December 2, 2025
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (டிசம்பர்.01) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.


