News May 7, 2025

ஓவிய, சிற்பக் கலைஞர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம்

image

தமிழக அரசு கலை பண்பாட்டு துறை, காஞ்சிபுரம் மண்டல கலை பண்பாட்டு மையத்தின் சார்பில் ஓவிய, சிற்பக்கலைஞர் பங்கேற்கும் 2 நாள் பயிற்சி முகாம் வேலூரில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களது சுயவிவர குறிப்பை உதவி இயக்குனர், மண்டல கலை பண்பாட்டு மையம், சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம், காஞ்சிபுரம் முகவரிக்கு மே10-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

Similar News

News November 24, 2025

வேலூர்: ஆட்டோ மீது கார் மோதி விபத்து – பெண் பலி

image

வேலூர்: வல்லண்டராமம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு (நவ.23) முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்தது. ஆட்டோவில் பயணம் செய்த ஜெயந்தி (54) என்பவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 24, 2025

வேலூர்: ஆட்டோ மீது கார் மோதி விபத்து – பெண் பலி

image

வேலூர்: வல்லண்டராமம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு (நவ.23) முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்தது. ஆட்டோவில் பயணம் செய்த ஜெயந்தி (54) என்பவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 24, 2025

வேலூர்: இளம்பெண்ணை அடைத்து வைத்து பாலியல் தொழில்!

image

வேலூர்: காட்பாடி தாராபடவேட்டில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண்ணை அடைத்து வைத்து பாலியல் தொழில் நடப்பதாக காட்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று (நவ.23) மாலை அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை மீட்ட போலீசார், பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வசந்தா (52), சந்திரசேகரன் (41) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

error: Content is protected !!