News May 7, 2025

ஓவிய, சிற்பக் கலைஞர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம்

image

தமிழக அரசு கலை பண்பாட்டு துறை, காஞ்சிபுரம் மண்டல கலை பண்பாட்டு மையத்தின் சார்பில் ஓவிய, சிற்பக்கலைஞர் பங்கேற்கும் 2 நாள் பயிற்சி முகாம் வேலூரில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களது சுயவிவர குறிப்பை உதவி இயக்குனர், மண்டல கலை பண்பாட்டு மையம், சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம், காஞ்சிபுரம் முகவரிக்கு மே10-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

Similar News

News November 8, 2025

வேலூர் இன்னும் சற்று நேரத்தில் சிறப்பு முகாம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு ஆகிய 6 தாலுகாவிலும் இன்று (நவ.8) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு சிறப்பு திருத்த முகம் நடைபெற உள்ளது. இதில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News November 8, 2025

வேலூர் மாவட்டத்தில் நாளை 9561 பேருக்கு எழுத்து தேர்வு

image

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் 2025-ம் ஆண்டுக்கான 2-ம் நிலை காவலர் மற்றும் சிறைக்காவலர், தீயணைப்பாளர்கள் தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு நாளை நவ.9-ம் தேதி நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் காட்பாடி விஐடி பல்கலைக்கழகம், தொரப்பாடி தந்தை பெரியார் பொறியியல் கல்லூரி, ஸ்ரீபுரம் ஸ்பார்க் பள்ளி என 3 மையங்களில் மொத்தம் 9,561 பேர் தேர்வு எழுத உள்ளனர். என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News November 8, 2025

வேலூர்:தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட போலீஸ்!

image

வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (39). இவர் வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி ஊனமுற்றார். இதனால் விரக்தியடைந்த வேல்முருகன் (நவ.7) பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த தெற்கு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!