News October 23, 2024
ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – ஆட்சியர் தகவல்

குமரி மாவட்டத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நவம்பர் 15 காலை 10.30 மணிக்கு ஓய்வூதிய இயக்குநர் முன்னிலையில் ஆட்சித்தலைவர் அலுவலக 3வது தளத்தில் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின், ஓய்வூதியம் தொடர்பாக தீர்வு செய்யப்படாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பிரச்சனைகள் குறித்து தீர்வு எட்டப்படும் என ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 2, 2025
குமரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News November 2, 2025
குமரி: கேரளா விரைந்தது தனிப்படை

பிரம்மபுரம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவரான கிருஷ்ணதாஸ் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ரமேஷ் மற்றும் விமல் ஆகியோர் மீது இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் கேரளாவில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர். மேலும் கொலை தொடர்பாக கிருஷ்ணதாஸ் மனைவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 2, 2025
குமரி: இனி வெளிநாட்டில் வேலை பெறலாம்

தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10, +2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ மற்றும் பாலிடெக்னிக் டிப்ளமோ மாணவர்கள், வேலையில்லாத இளைஞர்கள் www.nationalskillacademy.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். படிப்புகளை முடித்த பிறகு, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெறலாம்.


