News April 26, 2025
ஓமலூரில் கலெக்டர் ஆறுதல்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த 4 பேர் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கோர சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News November 6, 2025
சேலம்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

சேலம் மக்களே..வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
News November 6, 2025
சேலத்தில் பதிவு செய்ய ‘கெடு’.. உடனே பண்ணுங்க!

சேலம்: மின்னணு முறையில் விவசாயிகளின் தரவு சேகரிக்கப்பட்டு, தனித்துவ அடையாள எண் வழங்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் வேளாண், அதைசார்ந்த அனைத்து மானியங்களும் இதை அடிப்படையாக வைத்தே வழங்கப்படும். விடுபட்டவர்கள் ஆதார்,நில ஆவண நகல்,ஆதார் இணைத்த மொபைல் எண் ஆகியவற்றுடன் பொது சேவை மையம், வட்டார வேளாண் விரிவாக்க மையத்தின் முகாம்களுக்கு சென்று பதிவு செய்து எண் பெறலாம். வரும் 15ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
News November 6, 2025
சேலம்: மக்களே உஷார்.. ரூ.50 லட்சம் மோசடி!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேலம் கமிஷனரிடம் புகார் கொடுத்தனர். அதில் சேலம் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த பர்வீன் காதர் பாஷா, சிங்கப்பூரில் வேலை இருப்பதாக கூறி, ஒவ்வொரு வருடமும் 1 லட்சத்து 25 ஆயிரம் பெற்றுக் கொண்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி, 6 மாதங்கள் ஆகியும் வேலையும் தரவில்லை, பணமும் தரவில்லை எனக்கூறி, பணத்தை மீட்டு தர மனு அளித்தனர்.


