News April 19, 2024
ஓட்டு போடுவோம், நாட்டை காப்போம் : யோகிபாபு

மக்கள் அனைவரும் ஓட்டு போட வேண்டும், நாட்டை காக்க வேண்டும் என நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஆதிதிராவிடர் பள்ளியில் நடிகர் யோகி பாபு தனது மனைவியுடன் வந்து வாக்கை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் அனைவரும் வாக்களிப்பது முக்கியம். ஒரு நல்ல தலைவரை தேர்வு செய்ய மக்கள் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.
Similar News
News April 20, 2025
பெசன்ட் நகர் அறுபடை வீடு முருகன் கோயில்

‘அறுபடை வீடு’ சன்னதிகளில் குடி கொண்டிருக்கும் முருகனை இந்த ஒரே கோயிலில் நம் தரிசிக்கலாம். ஒவ்வொரு சுவாமிக்கும் தனி சன்னதி உள்ளது. இந்த கோயில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள கலாக்ஷேத்ரா காலனியில் உள்ளது. ஆறுபடை வீடுகளில் இருந்தும் புனிதத்தன்மை எடுத்து வரப்பட்டு, இங்கு ஒரே இடத்தில் தனித்தனி கோயில்களாக கட்டப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஆறுபடை முருகனை வழிபட்ட பலனை பெற முடியும். ஷேர் பண்ணுங்க
News April 19, 2025
சென்னை இரவு ரோந்து போலீசாரின் விவரம்

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (19.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*
News April 19, 2025
சென்னை AC ரயில் குறித்து மக்கள் கருத்து

தமிழ்நாட்டின் முதல் குளிர்சாதன புறநகர் ரயில் சேவை சென்னையில் இன்று (ஏப். 19) தொடங்கியது. இந்நிலையில்,”கட்டணம் அதிகப்படியாக உள்ளது. PEAK HOURS தேவை அடிப்படையில் சேவைகள் இல்லாதது ஏமாற்றம். வெயில் கொளுத்தும் பகல் நேரத்தில் ஏசி சேவை இல்லை. குறைந்த அளவில் ஏசி சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன” உள்ளிட்ட குறைகளை பொதுமக்கள் முன்வைத்துள்ளனர். *உங்களுக்கு ஏதெனும் குறைகள் இருந்தால் கமெண்ட்ல சொல்லுங்க*