News April 21, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணி: இன்றே கடைசி நாள்

image

அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர் – நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். இன்றே (ஏப்.21) கடைசி தேதி என்பதால் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News September 15, 2025

அன்பு கரங்கள் திட்டம்: ஆட்சியர் பெருமிதம்

image

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பெற்றோர் இருந்தால் என்ன கிடைக்குமோ அதை அந்தக் குழந்தைகளுக்கு “அன்புக்கரங்கள் திட்டம் ” மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்குகின்றார். இத்திட்டம் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு பேருதவியாக அமையும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று தெரிவித்துள்ளார்.

News September 15, 2025

விழுப்புரம்: டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

image

விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில், காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (செப்.15) டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, காலி மதுபாட்டில்களை மாலையாக அணிந்து, ஊழியர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதில், ஏராளமான டாஸ்மாக் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

News September 15, 2025

விழுப்புரம்: வங்கியில் வேலை, ரூ. 1 லட்சம் சம்பளம்

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய பணியிடங்கள், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
▶️ பணியிடங்கள்: 122
▶️ சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை
▶️ வயது வரம்பு: 25 முதல் 35 வரை
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்.2
மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு<<>> கிளிக் செய்யவும். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!