News April 21, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணி: இன்றே கடைசி நாள்

image

அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர் – நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். இன்றே (ஏப்.21) கடைசி தேதி என்பதால் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News December 3, 2025

விழுப்புரம்: தந்தை கண்டித்ததால் மாணவன் விபரீத முடிவு!

image

விழுப்புரம்: மரூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் தினேஷ் குமார் (18) திண்டிவனத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். தினேஷ்குமார் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் நேற்று முன்தினம் ஏழுமலை, தனது மகன் தினேஷ்குமாரை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த தினேஷ்குமார் வீட்டில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பெரிய தச்சூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 3, 2025

BREAKING: விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

‘டிட்வா’ புயல் எதிரொலியாக இன்று (டிச.3) விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக விழுப்புரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தற்போது அறிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. உங்க எரியா மழை நிலவரம் குறித்து கமெண்ட் பண்ணுங்க!

News December 2, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!