News January 24, 2025
ஓட்டுநர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் இன்று (24.01.2025) ஓட்டுநர்கள் தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வாழ்த்து அட்டை வழங்கி சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்வு துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 22, 2025
திருப்பத்தூர்: நாக்கை தானே அறுத்துக்கொண்ட நபர்!

திருப்பத்தூர்: ஆம்பூர், வீராங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மருது பாண்டியன் வயது (32). கூலி தொழிலாளியான இவர் நேற்று (நவ.22) இரவு 10.30 மணியளவில், ஆம்பூர் உமர் ரோட்டில் உள்ள கோழி கடையின் அருகே, தனது நாக்கை தானே அறுத்துக் கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். பின்னர், வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News November 22, 2025
திருப்பத்தூர்: 500 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகற்கள் கண்டெடுப்பு!

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே பேராசிரியர் க.மோகன்காந்தி தலைமையில் நடைபெற்ற கள ஆய்வில் விஜயநகர காலத்தைச் சேர்ந்த இரு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த கற்கள், 500 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த போர்களை குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், போரில் மரணமடைந்த வீரனின் மனைவி, கணவனோடு உடன்கட்டை ஏறியது போல் உள்ளதாக தெரிவித்துள்ளார். இவற்றைத் தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
News November 22, 2025
திருப்பத்தூர்: காவலர் ரோந்து பணி விவரம்!

திருப்பத்தூர் மாவட்டம், நேற்று (நவ.21) இரவு – இன்று (நவ.22) காலை ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் ஆணைக்கிணங்க இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் கீழே அட்டவணைகள் உள்ளது. ரோந்து பணி 10 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறுகிறது. பொது மக்களுக்கு இந்நேரத்தில் புகார் இருந்தால் உடனடியாக புகாரை தெரிவிக்கலாம்.


