News April 19, 2025

ஓடும் ரயிலில் தவறி விழுந்து பைனான்ஸ் ஊழியர் பலி

image

கிருஷ்ணகிரி மாவட்டம் காரகுப்பம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 27). இவர் ஆந்திரா மாநிலம் நெல்லூரில் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்ய ஜோலார்பேட்டை – கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலில் பயணம் செய்த போது எதிர்பாரத விதமாக தவறி விழுந்து சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News November 16, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணியின் காவலர் விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (நவ.15) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம். என்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News November 15, 2025

கிருஷ்ணகிரி: யானை தாக்கியதில் இருவர் படுகாயம்

image

கிருஷ்ணகிரி: பர்கூர், ஜகினி கொள்ளை கிராமத்தில் நேற்று (நவ.14) இரவு 5 யானைகள் நடமாட்டம் இருந்தது. இந்நிலையில் ஜகினி கொள்ளை பகுதியை சார்ந்த கோவிந்தன் மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோரை யானை தாக்கியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்ட பொதுமக்கள் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News November 15, 2025

கிருஷ்ணகிரி: ரயில்வேயில் 3058 காலி பணியிடங்கள், APPLY NOW!

image

கிருஷ்ணகிரி மக்களே, இந்திய ரயில்வேயில் டிக்கெட் கிளர்க், ஜூனியர் கிளர்க் போன்ற 3058 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 12th முடித்து, 18 வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.27ம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ரயில்வேயில் வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர்!

error: Content is protected !!