News April 19, 2025
ஓடும் ரயிலில் தவறி விழுந்து பைனான்ஸ் ஊழியர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் காரகுப்பம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 27). இவர் ஆந்திரா மாநிலம் நெல்லூரில் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்ய ஜோலார்பேட்டை – கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலில் பயணம் செய்த போது எதிர்பாரத விதமாக தவறி விழுந்து சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News November 22, 2025
கிருஷ்ணகிரி: முதல் பரிசு 10 லட்சம்.. ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

கிருஷ்ணகிரி, “மீண்டும் மஞ்சப்பை” திட்டத்தின் கீழ் பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவித்து, மஞ்சப்பை விருது 2025-2026க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முதல் பரிசு 10 லட்சம், 2ம் பரிசு 5 லட்சம், 3ம் பரிசு 3 லட்சம் விண்ணப்ப படிவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிடைக்கும். (கடைசி தேதி: நவ.15) என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 21, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம் வெளியீடு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (நவ.21) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 21, 2025
கிருஷ்ணகிரியில் ‘லவ் ஜிகாத்’ கொடூரம்!

கிருஷ்ணகிரியில், 17 வயது சிறுமியை கடத்தி, மதமாற்றம் செய்து, ஒரே நாளில் திருமணத்தையும் முடித்து, ‘லவ் ஜிகாத்’ என்ற கொடூரத்தை அரங்கேற்றி உள்ளனர். இந்த சம்பவத்தில், விஷ்வ ஹிந்து பரிஷத் தலையீட்டை தொடர்ந்து, முஸ்லிம் வாலிபர் அப்துல் கைப் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறுமி என தெரிந்தும் திருமணத்தை நடத்தி வைத்த மத தலைவர்கள் மற்றும் வாலிபரின் பெற்றோரிடம் விசாரணை நடந்து வருகிறது.


