News April 14, 2024
ஓடும் பேருந்தில் மாணவன் பலி

வடுகப்பட்டியைச் சேர்ந்தவர் வேதமூர்த்தி. இவர் அரசு கல்லூரியில் 1 ஆம் ஆண்டு படித்து வந்தார். நேற்று வழக்கம் போல் கல்லூரி செல்ல தனியார் பேருந்தில் ஏறி முன் வாசல் படிக்கட்டில் நின்று பயணம் செய்தார். சக்கம்பட்டி அருகே பேருந்து வளைவில் திரும்பும் போது கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 2, 2025
தேனி: அரசுக்கு கோரிக்கை வைத்த முன்னாள் முதல்வர்

பயிர் காப்பீட்டிற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தனது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார். மேலும் விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலித்து கால அவகாசத்தை டிசம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 2, 2025
தேனி: ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

தேனி மக்களே, ஆதார் கார்டில் மாற்றம் செய்யனுமா? இதற்காக நீங்க ஆதார் மையங்களில் கால் கடுக்க நிக்கிறீங்களா?? வீட்டில் இருந்தே மாத்திக்க வழி இருக்கு. இந்<
News December 2, 2025
தேனி: மழை நீரில் மின்கசிவு; முதியவர் உயிரிழப்பு.!

போடியை சேர்ந்தவர் ராமையா (60). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற கோமாதா பூஜைக்காக தனது பசுமாடுகளை அழைத்துச் சென்றாா். அப்போது பசுமாடுகள் மிரண்டு ஓடின. மாடுகளைப் பிடிக்க முயன்றபோது ராமையா தவறி விழுந்தாா். இதில் மழைநீரில் மின்சாரம் கசிந்திருந்ததால் ராமையா மீது பாய்ந்தது. மயக்கமடைந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். போடி போலீசார் வழக்கு பதிவு.


