News January 2, 2025
ஓசூர் வீராங்கனைக்கு அர்ஜுனா விருது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த நித்யஸ்ரீ சுமதி சிவன் 2024 பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகளில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதேபோல் 2022 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஒற்றையர், கலப்பு மற்றும் பெண்கள் இரட்டையர் பிரிவுகளில் மூன்று வெண்கலப் பதக்கங்களையும் தட்டி தூக்கினார். அவரை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு இன்று அர்ஜுனா விருது அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 4, 2025
கிருஷ்ணகிரி: ரூ.71,900 சம்பளத்துடன் அரசு வேலை!

தமிழத்தில் காலியாக உள்ள 1,429 HEALTH INSPECTOR பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, MPHW/ சுகாதார ஆய்வாளர் ஆகிய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 18-60 வயதிற்குள் இருக்க வேண்டும். இதற்கு ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் <
News November 4, 2025
கிருஷ்ணகிரி ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நவம்பர் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு விவசாயிகளுக்கு அழைப்பு. இந்நிகழ்வு மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெறும். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் உரையாற்றுவதற்கு விவசாயிகள் வருகிற (நவ.10) மதியம் 2 மணிக்குள் வரவேண்டும். மேலும் மூன்று கோரிக்கை மனு வழங்க (அஜெண்ட) வேளாண்மை துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
News November 4, 2025
கிருஷ்ணகிரி: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க !

கிருஷ்ணகிரியில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது.
1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
2.பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
4.சைபர் கிரைம் பாதுகாப்பு ( 1930 )
இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


