News January 2, 2025

ஓசூர் வீராங்கனைக்கு அர்ஜுனா விருது 

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த நித்யஸ்ரீ சுமதி சிவன் 2024 பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகளில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதேபோல் 2022 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஒற்றையர், கலப்பு மற்றும் பெண்கள் இரட்டையர் பிரிவுகளில் மூன்று வெண்கலப் பதக்கங்களையும் தட்டி தூக்கினார். அவரை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு இன்று அர்ஜுனா விருது அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 21, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம் வெளியீடு!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (நவ.21) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 21, 2025

கிருஷ்ணகிரியில் ‘லவ் ஜிகாத்’ கொடூரம்!

image

கிருஷ்ணகிரியில், 17 வயது சிறுமியை கடத்தி, மதமாற்றம் செய்து, ஒரே நாளில் திருமணத்தையும் முடித்து, ‘லவ் ஜிகாத்’ என்ற கொடூரத்தை அரங்கேற்றி உள்ளனர். இந்த சம்பவத்தில், விஷ்வ ஹிந்து பரிஷத் தலையீட்டை தொடர்ந்து, முஸ்லிம் வாலிபர் அப்துல் கைப் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறுமி என தெரிந்தும் திருமணத்தை நடத்தி வைத்த மத தலைவர்கள் மற்றும் வாலிபரின் பெற்றோரிடம் விசாரணை நடந்து வருகிறது.

News November 21, 2025

கிருஷ்ணகிரி: ரயில்வேயில் 5,810 பணியிடங்கள் APPLY NOW!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, டிக்கெட் மேற்பார்வையாளர்-161, ஸ்டேஷன் மாஸ்டர்-615, சரக்கு ரயில் மேலாளர்-3416, இளநிலை கணக்கு உதவியாளர்-921, முதுநிலை எழுத்தர்-638 போக்குவரத்து உதவியாளர்-59. டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.25,500-ரூ.35,400 வரை வழங்கப்படும். நவ.27ம் தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர்!

error: Content is protected !!