News April 12, 2025
ஓசூர் பஸ் நிலையத்தில் ஆண் சடலம்

ஓசூர் பேருந்து நிலையம் அருகில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஓசூர் போலீசார் அங்கு வந்து உடலை மீட்டு விசாரித்தனர். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் ஏதும் உடனடியாக தெரியவில்லை. பின்னர் அவரது உடல் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Similar News
News November 26, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

மீஷோ செயலி, (Meesho) வில் ஏதேனும் பொருள் வாங்கிய பின் உங்கள் முகவரிக்கு, அல்லது whatsappக்கு மீஷோவில் இருந்து (lucky drawn gift win) என்று ஆங்கிலத்தில் நீங்கள் வென்று இருப்பதாக கூறி உங்களை பணம் அனுப்பும் படி கூறினால், பணம் அனுப்பி ஏமாறாதீர்கள், மேலும் சந்தேகங்களுக்கு சைபர் கிரைம் தொடர்பு எண் 1930 ல் (அ) https://www.cybercrime.gov.in-ல் புகார் அளிக்கலாம், என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை.
News November 26, 2025
கிருஷ்ணகிரி: மலை அடிவாரத்தில் பெண் மர்மமரணம்!

பாகூர் அருகே மேல் சீனிவாசபுரத்தை சேர்ந்த கோவிந்தம்மாள் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் 100 நாள் திட்டத்தின் கீழ் பண்ணைக்குட்டை பணி முடிந்து வெளியே செல்வதாக சொல்லி சென்றுள்ளார், நெடுநேரம் ஆனா பின்னும் அவர் திரும்பாத நிலையில் அவரை தேடி வந்தனர். அப்போது மலையின் அடிவாரத்தில் கோவிந்தம்மாள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார், போலீசார் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
News November 26, 2025
கிருஷ்ணகிரி: மலை அடிவாரத்தில் பெண் மர்மமரணம்!

பாகூர் அருகே மேல் சீனிவாசபுரத்தை சேர்ந்த கோவிந்தம்மாள் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் 100 நாள் திட்டத்தின் கீழ் பண்ணைக்குட்டை பணி முடிந்து வெளியே செல்வதாக சொல்லி சென்றுள்ளார், நெடுநேரம் ஆனா பின்னும் அவர் திரும்பாத நிலையில் அவரை தேடி வந்தனர். அப்போது மலையின் அடிவாரத்தில் கோவிந்தம்மாள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார், போலீசார் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.


