News December 31, 2024
ஓசூர் ஏரியில் கழிவுநீர் கலந்த லாரி ஓட்டுநர் கைது

ஒசூா் சிப்காட் போலீசார் பேகேப்பள்ளி ஏரிக்கரை பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் டேங்கர் லாரி ஒன்றில் இருந்து கழிவுநீர் ஏரியில் கலக்கப்பட்டது கண்ட போலீசார் அந்த லாரி ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் திருப்பத்தூர் மாவட்டம் காவேரியூரை சோ்ந்த திருநாவுக்கரசு என்பது தெரிய வந்தது. இதையடுத்து தனியார் நிறுவன கழிவுநீரை ஏரியில் கலந்ததால் போலீசார் அவரை கைது செய்தனர்.
Similar News
News January 3, 2026
கிருஷ்ணகிரி: சிலிண்டர் மானியம் வரவில்லையா? இத பண்ணுங்க

கூகுளில் mylpg என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் செய்யுங்கள்!
News January 3, 2026
கிருஷ்ணகிரிக்கு அரசு உறுதிமொழி குழு வருகை – ஆட்சியர் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகின்ற செவ்வாய்க்கிழமை (ஜன.6) அன்று தமிழக சட்டப் பேரவையின் 2024- 2026ம் ஆண்டுக்கான அரசு உறுதிமொழிக் குழு அதன் தலைவா் தி.வேல்முருகன் தலைமையில் வருகை தந்து மாவட்டத்தில் நிலுவையில் உள்ள உறுதிமொழிகளில் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்கின்றனா். பிற்பகல் 2 மணிக்கு உயா் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெறும், என்று மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
News January 3, 2026
கிருஷ்ணகிரி: ரூ.51,000 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!

1. SBI வங்கியில் காலிப்பணியிடங்கள் 996 லிருந்து 1146 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். 3. மாத சம்பளம் ரூ.51,000 முதல் வழங்கப்படும். 4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <


