News December 31, 2024

ஓசூர் ஏரியில் கழிவுநீர் கலந்த லாரி ஓட்டுநர் கைது

image

ஒசூா் சிப்காட் போலீசார் பேகேப்பள்ளி ஏரிக்கரை பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் டேங்கர் லாரி ஒன்றில் இருந்து கழிவுநீர் ஏரியில் கலக்கப்பட்டது கண்ட போலீசார் அந்த லாரி ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் திருப்பத்தூர் மாவட்டம் காவேரியூரை சோ்ந்த திருநாவுக்கரசு என்பது தெரிய வந்தது. இதையடுத்து தனியார் நிறுவன கழிவுநீரை ஏரியில் கலந்ததால் போலீசார் அவரை கைது செய்தனர்.

Similar News

News November 24, 2025

கிருஷ்ணகிரி: ரூ.15000 மானியம் குறித்து ஆட்சியர் அறிவிப்பு!

image

கிருஷ்ணகிரி ஆதிதிராவிடர் & பழங்குடியினருக்கு புதிய மின்மோட்டார் மாற்றத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள், நுண்ணீர் பாசனம் அமைத்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்கள்: சிட்டா, வரைபடம், ஜாதிச்சான்று, மார்பளவு புகைப்படம், ஆதார். மானியம் மின் மோட்டார் விலையின் ரூ.15000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 94430 83493 க்கு தொடர்பு கொள்ளலாம். என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 24, 2025

கிருஷ்ணகிரி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News November 24, 2025

கிருஷ்ணகிரி: விரல் நுனியில் ரேஷன் விவரங்கள்!

image

தமிழ்நாடு குடும்ப அட்டைதாரர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட செயலி தான் TNePDS மொபைல் செயலி. இதன் மூலம் உங்களுடைய ரேஷன் கடையில் என்ன பொருட்கள் உள்ளன என்ற இருப்பு விவரத்தை அறிந்து கொள்ளலாம். அதே சமயம், தங்களின் ரசீதுகளையும் சரிபார்த்துக் கொள்ளலாம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள இந்த செயலியை <>இங்கே க்ளிக்<<>> செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். இந்த தகவலை உடனே பகிருங்கள்.

error: Content is protected !!