News December 31, 2024
ஓசூர் ஏரியில் கழிவுநீர் கலந்த லாரி ஓட்டுநர் கைது

ஒசூா் சிப்காட் போலீசார் பேகேப்பள்ளி ஏரிக்கரை பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் டேங்கர் லாரி ஒன்றில் இருந்து கழிவுநீர் ஏரியில் கலக்கப்பட்டது கண்ட போலீசார் அந்த லாரி ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் திருப்பத்தூர் மாவட்டம் காவேரியூரை சோ்ந்த திருநாவுக்கரசு என்பது தெரிய வந்தது. இதையடுத்து தனியார் நிறுவன கழிவுநீரை ஏரியில் கலந்ததால் போலீசார் அவரை கைது செய்தனர்.
Similar News
News December 3, 2025
கிருஷ்ணகிரி: பைக்கில் சென்ற வாலிபர் வெட்டிக்கொலை!

ஓசூர் அடுத்த மாரசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ் (34) மாருதி நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, இன்று (டிச.3) மர்மநபர்கள் சிலர் வழிமறித்து அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளனர். இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த ஹரீஷின் உடலை போலீசார் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.
News December 3, 2025
கிருஷ்ணகிரி: SBI வங்கியில் சூப்பர் வேலை! APPLY NOW

கிருஷ்ணகிரி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Customer Relationship Executive
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க<
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 3, 2025
JUST IN: கிருஷ்ணகிரியில் கனமழை வெளுக்கும்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த தினங்களாக மழை பெய்யாவிட்டாலும் குளிர்ச்சியான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் நாளை (டிச.04) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே நாளை வேலைக்கு மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் அதற்கு ஏற்றவாறு தங்களின் பயனத்தை அமைத்து கொள்ளவும். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*


