News August 9, 2024
ஓசூரில் நெடுஞ்சாலையில் கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று மாலை (ஆகஸ்ட் 9) சுமார் 5 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெயர் தெரியாத நபர் நிலை தடுமாறி எதிரே வந்த லாரி மீது மோதினார். இந்த கோர விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி வந்தவர் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 13, 2025
கிருஷ்ணகிரியில் வேலை வேண்டுமா..?

கிருஷ்ணகிரி அடுத்து ராயக்கோட்டை ரோடு அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இன்று(டிச.13) காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். இதில், நூற்றுக்கு மேற்பட்ட தனியார் கம்பெனிகள் பங்கேற்க உள்ளன. 8 ,10,+2, ஐ டிஐ, டிகிரி,BE, நர்சிங், முடித்தவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடைய கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. (SHARE IT)
News December 13, 2025
கிருஷ்ணகிரி வருகிறார் இளையராஜா!

ஓசூரில் உள்ள தனியார் கல்லூரி அருகே தன்வந்திரி கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் வருடாபிஷேக விழா கடந்த டிச.8ஆம் தேதி தொடங்கி நடபெற்று வருகிறது. நாளை(டிச.14) இந்த விழா நிறைவடைகிறது. இந்நிலையில், ஓர் தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாளை ஒசூர் வருகை தரும் இளையராஜாவை, தனவந்திரி கோயிலுக்கு வருகை தருமாறு அறங்காவல் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
News December 13, 2025
கிருஷ்ணகிரி: காவல்துறையின் இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு இரவு ரோந்து பணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் அவசரநிலையில் தமக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொள்வதோடு, உடனடி உதவிக்கு 100 என்ற அவசர உதவி எண்ணையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.


