News March 19, 2025

ஓசூரில் தேனீக்கள் கொட்டி முதியவர் பலி

image

தருமபுரி தாசரஅள்ளி பகுதியை சேர்ந்த 75 வயதான வெங்கடேசன், ஓசூர் மலைக்கோவில் அருகே தேர்த் திருவிழாவில் கடை அமைத்து விற்பனை செய்து வந்தார். அப்போது மரத்தில் இருந்த தேனீக்கள் தாக்கியதால் காயம் அடைந்தார். ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 19, 2025

பிரமிக்க வைக்கும் மல்லப்ப கொண்டா கோயில்

image

நீங்கள் மேலே காணும் புகைப்படத்தில் உள்ள கோயில் அமர்நாத் கோவிலோ, வட மாநிலத்திலோ அல்ல. கிருஷ்ணகிரியில் இருந்து 42 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மல்லப்ப கொண்டா கோயில் தான். இந்த மல்லப்ப கொண்டா மலையின் வியூ பாய்ண்டுகளையும், அங்கு அமைந்திருக்கும் மிகப்பிரமாண்டமான மல்லேஸ்வர சுவாமியை தரிசிக்க குடும்பத்துடன் காலை வேளையை தேர்வு செய்தால் குழந்தைகளுடன் மூணாறுக்கு சென்ற அனுபவத்தை பெறலாம். ஷேர் பண்ணுங்க

News March 19, 2025

பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் கைது

image

பர்கூர் அருகே திருவண்ணாமலை சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த 17 வயது மாணவி நேற்று கிருஷ்ணகிரி – தி.மலை சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உயிரியல் தேர்வு எழுத சென்றுள்ளார். அப்போது அந்த அறையின் மேற்பார்வையாளராக பணியாற்றிய ரமேஷ்(44) மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் ரமேஷை இன்று போக்சோவில் கைது செய்துள்ளனர்.

News March 19, 2025

8th Pass செய்திருந்தால் போதும்! ரூ.14,970 சம்பளத்தில் அரசு வேலை…

image

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பியூன் பணியிடங்களை நிரப்ப தகுதியான பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.18 வயது 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.விண்ணப்ப கட்டணம் கிடையாது.நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். <>இந்த<<>> விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இதில் கொடுக்கப்பட்டிருக்கும் முகவரிக்கு மார்ச்.24க்குள் அனுப்ப வேண்டும்.

error: Content is protected !!