News March 29, 2024
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாழைக்காய் ஏலம்

சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாழைக்காய் ஏலம் நேற்று நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 4, 250 கிலோ வாழைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், நேந்திரன் வாழைக்காய் முதல் தரம் கிலோ ரூ.24 முதல் ரூ.27 வரையில் ஏலம் போனது .ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.82 ஆயிரம் என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News November 19, 2025
ஊத்துக்குளி அருகே வசமாக சிக்கிய மூவர் அதிரடி கைது

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுற்று பகுதியில் கடந்த 17ஆம் தேதி முத்துக்குமார் என்பவரின் செல்போன் திருடப்பட்டது. இது தொடர்பாக ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் செல்போனை பறித்துச் சென்ற கபிலன் , வெற்றிச்செல்வன் மற்றும் ராகுல் ஆகியோரை கைது செய்து குற்ற சம்பவத்துக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
News November 19, 2025
திருப்பூரில் சிறுமிக்கு கொடூரம்: டெய்லர் அதிரடி கைது

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன். திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த வடக்கு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தையல் தொழிலாளி ராமச்சந்திரனை கைது செய்தனர்.
News November 19, 2025
திருப்பூர் சிறப்பு ரயில் இயக்கம்

திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக எர்ணாகுளத்தில் இருந்து பீகார் மாநிலம் பராவுனிக்கு இன்று புதன்கிழமை ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எர்ணாகுளம்-பராவுனி (06195) சிறப்பு ப்பு ரெயில் ரயில் நேற்று மாலை 4 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு, வருகிற 22-ந்தேதி மதியம் 12 மணிக்கு பராவுனியை சென்றடையும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.


