News March 29, 2024

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாழைக்காய் ஏலம்

image

சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாழைக்காய் ஏலம் நேற்று நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 4, 250 கிலோ வாழைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், நேந்திரன் வாழைக்காய் முதல் தரம் கிலோ ரூ.24 முதல் ரூ.27 வரையில் ஏலம் போனது .ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.82 ஆயிரம் என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News December 2, 2025

பல்லடம் அருகே விஷம் குடித்து தற்கொலை!

image

பொங்கலூர் அருகே உள்ள கண்டியன்கோவில் உப்புக் கரைப்பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. அவருடைய மனைவி மயிலாத்தாள்(65). கடந்த சில மாதங்களாக இவர், உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வீட் டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மயிலாத்தாள் உயிரிழந்தார்.

News December 2, 2025

திருப்பூர்: மனைவியை கத்தியால் குத்திய கணவன்!

image

கோவை சின்னியம்பாளையத்தை சேர்ந்த சக்திவேல், அவருடைய மனைவி லட்சுமி ஆகியோர் பெருமாநல்லூர் அருகே தட்டாங்கோட்டை பகுதியில் வசித்து வருகின்றனர். ஹோட்டல் வேலை செய்யும் சக்திவேல், மனைவி லட்சுமி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை நேற்று கத்தியால் குத்தினார். பிறகு தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 2, 2025

சிவ பக்தர்களுக்கு நற்செய்தி

image

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீபத் திருநாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு செல்ல உள்ளதால் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் செவ்வாய்க்கிழமை கூடுதலாக 5 பேருந்துகளும் புதன்கிழமை 25 வியாழக்கிழமை 25 வெள்ளிக்கிழமை 10 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

error: Content is protected !!