News January 1, 2025
ஒழுங்குமுறை கூடங்கள் நாளை பயன்பாட்டிற்கு வரும்

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர், விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் பெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் டிசம்பர் 2ஆம் தேதி முதல் செயல்படாமல் இருந்தது. தற்போது, தற்காலிக சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், ஜனவரி 2, 3 ஆம் தேதிகளில் செயல்பட தொடங்கும் என விழுப்புரம் விற்பனை குழுவின் செயலர் சந்துரு நேற்று அறிவித்துள்ளார்.
Similar News
News October 19, 2025
விழுப்புரம்: தரமற்ற பெட்ரோலா? இதை பண்ணுங்க!

விழுப்புரம் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல் தரமானதாக இல்லையென்றால், நீங்கள் உடனடியாகப் புகார் அளிக்கலாம். இதற்காக, அனைத்து பெட்ரோல் நிறுவனங்களும் கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவித்துள்ளன.
1.இந்தியன் ஆயில்: 18002333555
2.பாரத் பெட்ரோல்: 1800224344
3.HP பெட்ரோல்: 9594723895
பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்!
News October 19, 2025
BREAKING: மருத்துவர் ராமதாஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வீட்டுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விழுப்புரத்திலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் தைலாபுரம் தோட்டத்தில் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்து வருகின்றனர். இதற்கிடையே மருத்துவர் ராமதாஸ் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News October 19, 2025
விழுப்புரம் மாவட்டத்தின் மழையளவு

விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது விழுப்புரம் 45 மில்லி மீட்டர் வளவனூர் 10 மில்லி மீட்டர் கோலியனூர் 10 மில்லி மீட்டர் கெடார் 5 மில்லி மீட்டர் முண்டியம்பாக்கம் 14 மில்லி மீட்டர் வானூர் 14 மில்லி மீட்டர் திண்டிவனம் 20 மில்லி மீட்டர் மரக்காணம் 10 மில்லி மீட்டர் செஞ்சி 4 மில்லி மீட்டர் வல்லம் 4 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது. மேலும் நாளையும் மழை இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.