News January 1, 2025

ஒழுங்குமுறை கூடங்கள் நாளை பயன்பாட்டிற்கு வரும்

image

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர், விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் பெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் டிசம்பர் 2ஆம் தேதி முதல் செயல்படாமல் இருந்தது. தற்போது, தற்காலிக சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், ஜனவரி 2, 3 ஆம் தேதிகளில் செயல்பட தொடங்கும் என விழுப்புரம் விற்பனை குழுவின் செயலர் சந்துரு நேற்று அறிவித்துள்ளார்.

Similar News

News September 17, 2025

இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப். 16) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 16, 2025

விழுப்புரம்: மாவட்ட ஜூனியர் தடகளப் போட்டி துவக்கம்

image

விழுப்புரம் மாவட்டத்தில், 49-வது ஜூனியர் தடகளப் போட்டி, இன்று (செப்.16) துவங்கியது. விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 20 வயதிற்குட்பட்ட 1,500 மாணவர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட தடகள சங்கத் தலைவர் பொன்னுசாமி கார்த்திக், போட்டிகளைத் தொடங்கி வைத்தார். இதில், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன

News September 16, 2025

விழுப்புரம்: 16 உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் 16 காவல் உதவி ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றிய விஜய், கெடார் காவல் நிலையத்திற்கும், கெடார் காவல் நிலையத்தில் பணியாற்றிய விஜயகுமார், மயிலம் காவல் நிலையத்திற்கும், ஆரோவில் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆனந்தன், செஞ்சி காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

error: Content is protected !!