News September 28, 2024
ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூன்று பேர் தற்கொலை

தென்காசி ஆய்க்குடி அருகே உள்ள கம்பளி பகுதியை சார்ந்த முருகேசன் என்பவர் விபத்தின் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுமன உளைச்சலில்இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் எங்கே சென்றார் என தெரியவில்லை. இந்நிலையில், நேற்று இரவு முருகேசனின் மகன் தோட்டத்தில் பார்த்தபோது அவரது தந்தை, தாத்தா, பாட்டி ஆகிய 3 பேரும் இறந்து கிடந்துள்ளனர். இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்
Similar News
News December 13, 2025
தென்காசி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

தென்காசி மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இத்திட்டம் இம்மாத (31/12/2025) இறுதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை SHARE பண்ணுங்க.!
News December 13, 2025
தென்காசி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

தென்காசி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் தென்காசி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் (9445000478, 9342595660) புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.
News December 13, 2025
தென்காசி: மதுபோதையால் தீ விபத்து.. தொழிலாளி பலி

திருவேங்கடம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். கூலித் தொழிலாளியான இவர் சில தினங்களுக்கு முன் மது போதையில் வீட்டில் கேஸ் அடுப்பு பற்ற வைக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக அவரது வேட்டியில் தீ பிடித்து உடல் முழுவதும் தீ பரவியது. இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்த பாலமுருகன் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதமாக உயிரிழந்தார்.


