News April 19, 2024

ஒரு மணி நிலவரப்படி அதிகபட்சமாக ஆலங்குளம் பகுதியில் 43.45 சதவீதம்

image

நெல்லை மாவட்டத்தில் இன்று காலை முதல் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர் இன்று மதியம் ஒரு மணி நிலவரப்படி மாவட்டத்திலேயே ஆலங்குளம் தொகுதியில் 43.45 சதவீதம் ,திருநெல்வேலியில் 36.87%,அம்பாசமுத்திரத்தில் 41.03%,பாளையங்கோட்டையில் 34.32%,நான்குநேரியில் 37.79%,ராதாபுரத்தில் 36.49%வாக்குகள் பதிவாகியுள்ளன .

Similar News

News April 21, 2025

பைக் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

image

நெல்லை கேடிசி நகரை சேர்ந்தவர் ஜெப்ரின் சாமுவேல் (22). இவர் திருச்சியில் உள்ள பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். நேற்று அவர் தனது இருசக்கர வாகனத்தில் டக்கரம்மாள்புரம் அருகே சென்ற போது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த சாமுவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 21, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஏப்.20] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

News April 20, 2025

நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை

image

நெல்லை மாவட்டம் கூடன்குளம் அணுமின் நிலையத்தில் வெல்டிங் கட்டுமானப்பணிக்கு 25 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 25,000 வரை வழங்கப்படுகிறது. ITI படித்திருந்தால் போதுமானது. வயது வரம்பு 18-21, முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக்<<>> செய்யவும். வேலை தேடுபவர்களுக்கு இதை ஷேர் செய்யவும்

error: Content is protected !!