News March 26, 2025
ஒரு நாள் கல்வி சுற்றுலா மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் குழந்தைகளுக்கு ஒரு நாள் கல்வி சுற்றுலாவை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் சுற்றுலா சென்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 8, 2025
மதுரை அங்கன்வாடியில் வேலை ரெடி

மதுரை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 217 பணியாளர், 4 குறு அங்கன்வாடி பணியாளர், 152 உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஏப்.23 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும்.
News April 7, 2025
மதுரை: தகாத உறவினால் தூக்கிட்டு தற்கொலை

மதுரையை சேர்ந்தவர் மணிகண்டன்(33). இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில், சீகுபட்டியை சேர்ந்த பால்பாண்டி மனைவி மயிலம்மாள்(43) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. தன்னை விட 10வயது மூத்த பெண்ணிடம் இவர் தொடர்பில் இருந்ததை உறவினர்கள் கண்டித்து வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த இருவரும், மயிலம்மாள் வீட்டு அருகே இருந்த வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். ஊமச்சிகுளம் போலீசார் விசாரணை.
News April 7, 2025
மதுரையில் இறைச்சிக் கடை செயல்பட தடை

மகாவீர் ஜெயந்தி தினம் அன்று(ஏப்.10) மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு பகுதிகளில்,ஆடு மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற இதர உயிரினங்கள் உள்ளிட்டவற்றின் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது என மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா அறிவிப்பு. மேலும் விற்பனை கடைகளை திறந்து வைக்கவும் கூடாது எனவும் தடையை மீறி செயல்படுபவர்கள் மீது பொது சுகாதார சட்டம் 1939 ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை.