News April 15, 2025

ஒரு க்ளிக் உங்க பணம் காலி சைபர் கிரைம் எச்சரிக்கை!

image

கரூர் மக்களே, அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.(ஷேர் செய்யுங்கள்)

Similar News

News November 14, 2025

மாற்றுத்திறத்திறனாளிகளுக்கு ஓவிய போட்டி

image

கரூரில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவில் ஓவியப் போட்டிகள் நடைபெறுகிறது மேலும் (http://q.me-qr.com/mk9ORAPC) இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கவும். மேலும் 20.11.2025 அன்று நாரத கான சபா, திருமண மண்டபத்தில் உழவர் சந்தை அருகில், நடை பெற இருக்கிறது என மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தகவல் அளித்துள்ளார்.

News November 14, 2025

கரூர் மேற்கு பகுதியில் நாளை மின் தடை

image

கரூர் மின் அலுவலகத்திற்கு உட்பட்ட 11 K .V. சஞ்சய் நகர், வடிவேல் நகர், ஆண்டான் கோவில் மற்றும் மொச்ச கொட்டம் பாளையம், பவித்திரம், ஆகிய மின்பாதைகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் வேப்பம்பாளையம், கோவிந்தம் பாளையம், மொச்ச கொட்டாம்பாளையம், அருள் நகர், சுந்தர் நகர், ஆத்தூர் பிரிவு, செல்லராபாளையம், விசுவநாதபுரி, ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

News November 14, 2025

கரூர்: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

image

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!