News May 10, 2024
ஒரத்தநாடு: மோட்டார் சைக்கிள் மோதி ஆசிரியர் பலி

திருவோணம் அடுத்த ஊரணிபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். பட்டதாரியான இவர் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். மோட்டார் சைக்கிளில் திருவோணத்தில் இருந்து ஊரணிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் இவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 20, 2025
கடன் பிரச்சனை தீர்க்கும் வைரவர்

தஞ்சை மாவட்டம் திருவையாறில் அமைந்துள்ளது அருள்மிகு வைரவன் திருக்கோயில். வேண்டியது நினைத்து சாமிக்கு வஸ்திரம், சாத்தி சிறப்பு அபிஷேகங்கள் செய்தால் நிச்சயம் நடக்கும் என்பது ஐதீகம். இங்கு வேண்டினால் கர்மவினைகள் தீர்ந்து விடும், கடன் பிரச்சனை, திருமண தடைகள் விலகும் என்பது நம்பிக்கை. அஷ்டமி தினத்தில் வைரவரை வழிபடுவது நன்மை தரும் என்று கூறப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
News April 20, 2025
தஞ்சாவூரில் வேலை வாய்ப்பு

தஞ்சாவூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Customer Care Executive) வேலைக்கான 40 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
News April 20, 2025
இன்று முதல் முன்பதிவு செய்யலாம்

தஞ்சை மாவட்டம் ராமநாதபுரம் கிராமத்தில் வருகின்ற 23ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனை முன்ன்னிட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்ய https://thanjavur.nic.in என்ற இணையதளத்தில் இன்று காலை 10 மணி முதல் 22 ஆம் தேதி காலை 10 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.