News April 21, 2025
ஒரகடம் அருகே லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த குணசேகரன் (23) ஸ்ரீபெரும்புதுார் அருகே உள்ள வல்லம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.இவர், நேற்று முன்தினம் (ஏப்ரல் 19) இரவு பைக்கில் ஒரகடத்தில் இருந்து வல்லம் பகுதிக்கு சென்றார். அப்போது, ஒரகடம் துணை மின் நிலைய சந்திப்பில் லாரி ஒன்று அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதமாக உயிரிழந்தார்.
Similar News
News December 4, 2025
காஞ்சி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
News December 4, 2025
காஞ்சிபுரம்: இழந்த செல்வத்தை மீட்க இங்கு போங்க!

திருமால்பூரில் அருள்மிகு மணிகண்டீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு, திருமால் இழந்த தன் சக்ராயுதத்தையும், சந்திர பகவான் இழந்த தன் பொலிவையும் மீண்டும் அடைவதற்கு தவம் இருந்து பலன் பெற்றனர். இங்கு வந்து சிவ தரிசனம் செய்து, சிவனாருக்கு தாமரைப்பூ, வில்வம், வஸ்திரம் சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நெய்வேத்தியம் செய்து வழிபட்டால், இழந்ததை (பொருள், பதவி) விரைவில் பெறலாம் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க!
News December 4, 2025
காஞ்சிபுரத்தில் ரூ.9.31 லட்சம் அபராதம்

காஞ்சிபுரத்தில் கடந்த நவம்பர் மாத வாகன தணிக்கையில், விதிமீறிய 121 வாகனங்களுக்கு மொத்தம் ரூ.9,31,690 அபராதம் வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவராஜ் உள்ளிட்டோர் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் பகுதிகளில் நடத்திய சோதனையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டது.


