News January 23, 2025

ஒன்றிய குழுவிடம் நாகை எம்.பி கோரிக்கை மனு

image

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே செருமங்கலம் ஒன்றிய குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் கலந்துகொண்டு ஒன்றிய குழுவிடம் கோரிக்கை மனு அளித்தார். இந்த மனுவில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17% ஈரப்பதம் இருந்தால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. ஈரப்பதத்தை 17%லிருந்து உயர்த்தி 22% வழங்க வேண்டும் என கூறியிருந்தார். 

Similar News

News September 17, 2025

திருவாரூர்: ஆதார் கார்டு தொலைந்து விட்டதா ?

image

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். <>myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid <<>>என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டால் போதும், உங்கள் ஆதார் எண் கிடைத்துவிடும். அதைவைத்து புதிய ஆதார் அட்டைக்கு எளிதாக விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News September 17, 2025

திருவாரூரில் கல்வி கடன் முகாம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்தியன் ஓவர்சிஸ் இணைந்து நடத்திய மாபெரும் கல்வி கடன் முகாமில் 383 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.4 கோடியே 99 லட்சம் மதிப்பில் கல்வி கடனுக்கான வங்கி வரைவோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வ.மோகனச்சந்திரன் வழங்கினார். இந்நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

News September 17, 2025

திருவாரூர்: பெரியார் சிலைக்கு மரியாதை செய்த எம்.எல்.ஏ

image

தந்தை பெரியார் 147-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் க.மாரிமுத்து எம்எல்ஏ பெரியரின் சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினார், இந்நிகழ்வில் முத்துப்பேட்டை சிபிஐ ஒன்றிய செயலாளர் எம்.உமேஷ்பாபு உடன் இருந்தார். மேலும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!