News May 16, 2024

ஐ.டி.ஐ.யில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

image

காட்டுமன்னார்கோயில், மங்களூர், சிதம்பரம், கடலூர் மற்றும் நெய்வேலியில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.யில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக ஜூன் மாதம் 7-ம் தேதி வரை மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என இன்று கடலூர் அரசு ஐ.டி.ஐ. முதல்வர் பரமசிவம் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 8, 2025

கடலூர் கலெக்டர் கடும் எச்சரிக்கை

image

கடலூர் மாவட்டத்தில், உணவுப் பொருட்களை பார்சல் செய்ய தரமற்ற பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்திய 9 உணவகங்களுக்கு ரூ.12,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தும் வணிகர்கள் மற்றும் உணவகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் எச்சரித்துள்ளார்.

News November 8, 2025

கடலூர்: 8.5 சவரன் நகை மாயம்

image

புதுச்சேரியைச் சேர்ந்த பாஸ்கர்(57) என்பவர், தனது மனைவி மகாலட்சுமியுடன் சிதம்பரத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு விசேஷத்திற்கு அரசு பேருந்து புதுச்சேரியில் இருந்து சிதம்பரம் வந்தார். பின் சிதம்பரம் கஞ்சி தொட்டி முனையில் இருந்து ஆட்டோவில் சென்றார்.அப்போது பையில் வைத்திருந்த 8 1/2 பவுன் நகை காணவில்லை. என தெரியவந்தது. பின் இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News November 8, 2025

கடலூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு

image

புவனகிரி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும், சிதம்பரம் பகுதியில் சேர்ந்த வாலிபரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இருவரு தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில், சிறுமி 6 மாதம் கர்ப்பமாக உள்ளார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வாலிபர் மீது நேற்று போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!