News November 24, 2024
ஐயப்ப பக்தர்களுக்கு தேனி ஆட்சியர் வேண்டுகோள்

தேனி மாவட்டம், குமுளி மலைப்பாதை வழியாக பல்வேறு பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் சென்று வருகின்றனர். அவ்வப்போது மலை சாலையில் வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்லக்கூடிய பக்தர்கள் குமுளி மலைப்பாதையில் இரவு பயணத்தை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News November 2, 2025
தேனி: கணவர் குடிப்பழக்கத்தால் மனைவி தற்கொலை

போடி பகுதியை சேர்ந்தவர் கீர்த்தனா (25). இவரது கணவருக்கு தீராத குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. குடிப்பழக்கத்தின் காரணமாக வீட்டில் இருந்த பொருட்களை அடகு வைத்து கீர்த்தனாவின் கணவர் குடித்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த கீர்த்தனா நேற்று (நவ. 1) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 2, 2025
தேனி: G.H-ல் இவை எல்லாம் இலவசம்!

தேனி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவை
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அம்புலன்ஸ்
சிகிச்சையில் தாமதம் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் தேனி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04546-250387 – 261403 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை உடனே SHARE பண்ணுங்க.
News November 2, 2025
பெரியகுளம் பகுதியில் வழிப்பறி.. 3 பேர் கைது!

பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்தவர் காந்தி (60). இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் அப்பகுதியில் நடந்து சென்றபோது இவரை வழிமறித்த போதை ஆசாமிகள் சிலர் காந்தியை மிரட்டி அவரிடமிருந்த ரூ.2,200 மற்றும் அலைபேசியை பறித்துக் கொண்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பெரியகுளம் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட ஜோதீஸ்வரன் (24), பஷீர் அஹமது (25), முகமது பைசல் (26) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.


