News November 23, 2024
ஐயப்பன்தாங்கல் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

குன்றத்தூர் ஒன்றியம் ஐயப்பன்தாங்கல் ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கலைசெல்வி மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் க.ஆர்த்தி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன், திருபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவண கண்ணன் பங்கேற்றனர்.
Similar News
News November 25, 2025
காஞ்சிபுரம் இட்லியின் சிறப்பு தெரியுமா?

மற்ற இட்லியை விட காஞ்சிபுரம் இட்லி முற்றிலும் வித்தியாசமானது. பல்லவர்கள் காலத்திலிருந்தே காஞ்சிபுரம் கோயில்களில் வழங்கப்பட்ட இந்த இட்லியின் சிறப்பம்சம் இதில் சேர்க்கப்படும் பொருள்களும் அதன் தயாரிப்பு முறையும் தான். நீளமான உருளை வடிவ மூங்கில் அச்சினுள் மந்தாரை இலையைப் பரப்பி, அரிசி, உளுந்து, சீரகம், வெந்தயம், மிளகு போன்ற பொருள்கள் சேர்த்து அரைக்கப்பட்ட மாவை ஊற்றி, வேகவைப்பது தான் காஞ்சிபுரம் இட்லி.
News November 25, 2025
காஞ்சிபுரம்: பிறந்தநாள் விழா கொண்டாட சென்ற நண்பன் பலி!

காஞ்சிபுரம்: சென்னை போரூர் பகுதியை சேர்ந்த அமித் பாஷா (21), காஞ்சீபுரம் அடுத்த பனப்பாக்கம் பகுதியில் உள்ள நண்பரின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு, நேற்று மற்றொரு நண்பர் நந்தகுமாருடன் பைக்கில் சென்றார். மாம்பாக்கம் பகுதியில் சென்ற போது பின்னால் வந்த லாரி திடீரென இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அமித் பாஷா பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 25, 2025
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (நவ.24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


