News October 23, 2024
ஐப்பசி மாத சஷ்டியை முன்னிட்டு எட்டுக்குடியில் சிறப்பு வழிபாடு

ஐப்பசி மாத சஷ்டி திதியை முன்னிட்டு எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முருகனின் ஆதி படை வீடு என அழைக்கப்படும் இக்கோவிலில் மூலவராக உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு 14 வகை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து, விபூதி காப்பு சாத்தப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
Similar News
News November 9, 2025
நாகை: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (நவ.8) இரவு 10 மணி முதல் இன்று (நவ.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 8, 2025
நாகூரில் கந்தூரி முன்னேற்பாடுகள் அமைச்சர்கள் ஆய்வு

புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 469வது கந்தூரி விழா வரும் நவம்பர் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை தருவார்கள் என்பதால், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவடி நாசர், மாவட்ட பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் இணைந்து இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
News November 8, 2025
நாகை: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: 14.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


