News October 23, 2024
ஐப்பசி மாத சஷ்டியை முன்னிட்டு எட்டுக்குடியில் சிறப்பு வழிபாடு

ஐப்பசி மாத சஷ்டி திதியை முன்னிட்டு எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முருகனின் ஆதி படை வீடு என அழைக்கப்படும் இக்கோவிலில் மூலவராக உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு 14 வகை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து, விபூதி காப்பு சாத்தப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
Similar News
News December 22, 2025
நாகை: போலீஸ் அடித்தால் எப்படி புகார் அளிப்பது ?

உங்கள் மீது எந்த தவறும் இல்லாமல் போலீசார் உங்களை அடித்தால், அவர் மீது மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் செயல்படும் Police Complaint Authority-இல் ஆதாரங்களுடன் நீங்கள் புகார் அளிக்கலாம். அதில் பயன் கிடைக்காத பட்சத்தில், <
News December 22, 2025
நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் பசு, எருமை வெள்ளாடு போன்ற கால்நடைகளை எளிதில் தாக்கக் கூடிய கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாம் வரும் 29/12/2025 முதல் 28/01/2026 வரை கிராமங்கள் தோறும் நடைபெற உள்ளது. எனவே கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்கு சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தி பயன்பெறுமாறு நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News December 22, 2025
நாகை: கிறிஸ்துமஸ் சிறப்பு ரயில் அறிவிப்பு

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு ரயிலானது செகந்தராபாத்திலிருந்து (ஐதராபாத்) நாளை (டிச.23) இரவு 7.25 மணிக்கு புறப்பட்டு சென்னை, விழுப்புரம், காரைக்கால், நாகூா், நாகை வழியாக டிச.24 மாலை 5.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுமாா்கத்தில் வேளாங்கண்ணியிலிருந்து டிச.25 அன்று காலை 8 மணிக்கு புறப்பட்டு, அதே வழியில் டிச.26 காலை 6.10 மணிக்கு செகந்தராபாத் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


