News October 23, 2024

ஐப்பசி மாத சஷ்டியை முன்னிட்டு எட்டுக்குடியில் சிறப்பு வழிபாடு

image

ஐப்பசி மாத சஷ்டி திதியை முன்னிட்டு எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முருகனின் ஆதி படை வீடு என அழைக்கப்படும் இக்கோவிலில் மூலவராக உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு 14 வகை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து, விபூதி காப்பு சாத்தப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Similar News

News December 13, 2025

நாகை: 101 வயதான சமூக சேவகரை பாராட்டிய CM

image

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள கூத்தூர் உழவனின் நில உரிமை இயக்க செயலாளர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன். 101 வயதான இவரின் சமுக சேவை பாராட்டி மத்திய அரசு சார்பில் பத்மஸ்ரீ, பத்ம விபூசன் போன்ற விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற மகளிர் உரிமை தொகை விரிவாக்க திட்ட விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணம்மாள் ஜெகநாதனை பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

News December 13, 2025

நாகை: டிகிரி போதும்..! வங்கியில் வேலை!

image

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-ல் காலியாக உள்ள 185 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!

News December 13, 2025

நாகை:மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

நாகை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்புகளைச் சார்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்னப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த உதவித் தொகை பெற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள்<> https://umis.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!