News October 23, 2024
ஐப்பசி மாத சஷ்டியை முன்னிட்டு எட்டுக்குடியில் சிறப்பு வழிபாடு

ஐப்பசி மாத சஷ்டி திதியை முன்னிட்டு எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முருகனின் ஆதி படை வீடு என அழைக்கப்படும் இக்கோவிலில் மூலவராக உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு 14 வகை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து, விபூதி காப்பு சாத்தப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
Similar News
News November 21, 2025
நாகை: இறால் மீன் வளர்ப்பு பயிற்சி

நாகையில் நீர்வாழ் உயிரினங்களான இறால், மீன்வளர்ப்பு செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கான அடிப்படை நிலை பயிற்சி 4 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் நாகை கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 7810858059 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 20, 2025
SIR சிறப்பு முகாம்; ஆட்சியர் அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வருகின்ற 22. 11 .2025 மற்றும் 23. 11 .2025 ஆகிய இரு நாட்களில் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் பூர்த்தி செய்வதற்கான சிறப்பு உதவி மையம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News November 20, 2025
நாகை: 10th போதும் அரசு வேலை!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள 1383 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, 12th, டிப்ளமோ, துறை சார்ந்த டிகிரி
3. கடைசி தேதி : 02.12.2025
4. சம்பளம்: ரூ.18,000 – ரூ.1,51,100
5. வயது வரம்பு: 18 – 40 (SC/ST – 45, OBC – 43)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..


